தமிழறிஞர்களுக்கான 7 சிறப்பு விருதுகள் – ஆகஸ்ட் 16 வரை விண்ணப்பம்!
தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழறிஞர்களுக்கான 7 சிறப்பு விருதுகள் கொடுக்கப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பம் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் வரவேற்கப்பட்டுள்ளன.
விருது விண்ணப்பங்கள்
தமிழக அரசின், தமிழ் வளர்க்கும் பணியில் முக்கிய பங்காற்றி வரும் தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் தமிழறிஞர்களுக்கான விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுகளை பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழ் மொழிக்கும் அம்மொழியின் வளர்ச்சிக்கும் பாடுபடுவதில் முக்கிய பங்காற்றி வரும் தமிழறிஞர்களை கௌரவப்படுத்தும் வகையில் தமிழக அரசு பல விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.
தமிழக ரேஷன் கடைகளில் ரூ.4000 & நிவாரண பொருட்கள் – 4 லட்சம் பேர் பெறவில்லை!
அந்த வகையில் வரும் திருவள்ளுவர் விழாவில் தமிழறிஞர்களுக்காக திருவள்ளுவர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, பேரறிஞர் அண்ணா விருது ஆகிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. இந்த விருதுக்கு தகுதியானவர்களது விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. அதன் படி விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அவற்றை முறையாக பூர்த்தி செய்து, தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ் வளர்ச்சி வளாகம் முதல் தளம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-600 008 என்ற முகவரிக்கு வரும் ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இது குறித்த கூடுதல் தகவல்களை 044-28190412, 044-28190413 என்ற எண்ணிலும் [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.