தமிழக ரேஷன் கடைகளில் ரூ.4000 & நிவாரண பொருட்கள் – 4 லட்சம் பேர் பெறவில்லை!
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் 4.22 லட்சம் பேர் கொரோனா நிவாரணத்தொகை மற்றும் நிவாரணப்பொருட்களை வாங்காமல் உள்ளனர் என உணவு வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது.
தேக்கமடைந்த நிவாரணத் தொகுப்பு :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் கடந்த மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு முதல்வர் கொரோனா நிவாரணத் தொகையாக ரூபாய் 4000 வழங்கப்படும் என அறிவித்தார். அதன் படி ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு மே மாதம் முதல் தவணையாக 2000 வழங்கப்பட்டது. மேலும் கலைஞர் பிறந்தநாளையொட்டி 14 வகை இலவச மளிகை தொகுப்பும் அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு வணிகர் நல வாரிய உறுப்பினர்கள் கவனத்திற்கு – இன்று முதல் இலவசம்!
மேலும் ஜூன் மாதத்தில் கொரோனா நிவாரணத் தொகையின் இரண்டாம் தவணை ரூபாய் இரண்டாயிரமும், கொரோனா நிவாரணப்பொருட்களும் வழங்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு 200 குடும்பங்கள் வீதம் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும் சிலர் அரசின் நிவாரணங்களை பெறவில்லை. அவர்களின் நிவாரண பொருட்கள் தேக்கமடைந்துள்ளது. மேலும் நிவாரண தொகை 4 ஆயிரம் ரூபாய் பெறவும் பெரும்பாலான மக்கள் ரேஷன் கடைகளுக்கு வரவில்லை. இதுவரை மொத்தம், 4,160 கோடி ரூபாய் கொரோனா நிவாரண தொகையாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மே மற்றும் ஜூன் மாதம் அரசின் நிவாரணத் தொகை மற்றும் பொருட்கள் பெறாதவர்கள் இம்மாதம் பெறலாம் என அறிவிக்கப்பட்டது. முதல் தவணை 2000 ரூபாயை 1.60 லட்சம் ரேஷன் அட்டைதார்களும், இரண்டாம் தவணையை 1.59 லட்சம் பெரும் வாங்காமல் உள்ளனர். மேலும் 2.63 லட்சம் கார்டுதாரர்கள் மளிகை தொகுப்பையும் பெறவில்லை. மொத்தம் 4.22 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் கொரோனா நிவாரண தொகுப்பை வாங்காமல் உள்ளனர் என உணவு வழங்கல் துறை தகவல் தெரிவித்துள்ளது.