கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் – முன்னாள் முதல்வர் கோரிக்கை!

0
கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் - முன்னாள் முதல்வர் கோரிக்கை!
கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் - முன்னாள் முதல்வர் கோரிக்கை!
கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 நிவாரணம் – முன்னாள் முதல்வர் கோரிக்கை!

புதுவையில் கனமழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.5,000 நிவாரணம் வழங்க வேண்டும், மக்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என்றும் முன்னாள் முதல்வர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

நிவாரணத் தொகை:

வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடைந்து தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதற்கு முன்னரிலிருந்து புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. மேலும், ஞாயிற்றுக் கிழமை முதல் இடைவிடாது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி சாலை முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆறு, குளம் மற்றும் ஏரிகளில் கனமழை காரணமாக தண்ணீர் நிரம்பி வருகிறது. பல இடங்களில் ஏரிகள் முழுவதுமாக நிரம்பி,மறுகால் வடிந்து வருகிறது.

EPFO சந்தாதாரர்களுக்கு ஓய்வூதியம் அதிகரிப்பு? விரைவில் அறிவிப்பு!

இதனால் கிராமங்களில் உள்ள 1,000 ஏக்கர் அளவிலான பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. மேலும், இரண்டு நாட்களுக்கு அதிக கனமழை பெய்ய இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு நிலை மேலும் பதிப்படையக்கூடும். இந்நிலையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி இது குறித்து வீடியோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 10 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் ஏழை தொழிலாளிகள், கட்டுமான தொழிலாளர்கள், விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், கூலி தொழிலாளர்கள் அனைவரும் எவ்வித வருமானமுமின்றி பாதிக்கப்படுகின்றனர்.

உடனடியாக பர்சனல் மேரேஜ் லோன் பெறுவது எப்படி? முழு விபரங்கள் இதோ!

இதனால் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் புதுச்சேரி அரசு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். மேலும், தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள தண்ணீரை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும், மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மக்களுக்கு பாதிக்கப்பட்ட குடிநீர், தடையில்லா மின்சாரம் போன்ற அத்தியாவசிய தேவைகள் கிடைப்பதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி புதுவை அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!