தமிழக கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா காரணமாக பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதனால் தமிழக அரசு விவசாயத்திற்காக கூட்டுறவு வங்கியில் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. இது தொடர்பாக மேலும் சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.
நகைக்கடன் தள்ளுபடி
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் ஏற்பட்டதால் பொதுமக்கள் பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய நிலையை அடைந்தனர். அதிலும் குறிப்பாக விவசாயிகள் விவசாயத்திற்காக பெறப்பட்ட கடனை செலுத்த முடியாமல் இருந்தனர். அதனால் தமிழக அரசு விவசாயிகளுக்கு உதவிபுரியும் வகையில் கூட்டுறவு வங்கியில் விவசாயத்திற்க்காக வாங்கிய நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன்களை பெற்றவருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தது.
மாநில அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து வருவதாக கண்டறியப்பட்டது. அதாவது போலி நகைகளை கொண்டு கடன் வாங்குவது, ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் வெவ்வேறு கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவது அத்துடன் வங்கி அதிகாரிகள் கூட மோசடிக்கு உடந்தையாக இருப்பது உள்ளிட்ட முறைகேடுகள் தொடர்ந்து நடைபெற்றது. அதனால் இதனை கட்டுப்படுத்த கூட்டுறவு வங்கிகளில் உயர் அதிகாரிகளால் ஆய்வுகள் நடத்தப்பட்டது. மேலும் தகுதியான நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று அறிவித்தது.
தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்? ஷாக் ரிப்போர்ட்! அரசின் முடிவு என்ன?
இது குறித்து எடப்பாடி பழனிசாமி அவர்கள் சட்டமன்ற கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பினார். இதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியதாவது, தகுதியான நபர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்ய தமிழக அரசு தயாராக உள்ளதாக கூறியுள்ளார். அத்துடன் தமிழகத்தில் இதுவரை 13 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் 20 லட்சம் பேர் 40 கிராமுக்கு மேல் நகைக்கடன் பெற்றிருப்பதால் அவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வழங்கப்பட மாட்டாது என்றும் கூறியுள்ளார்.