மாநில அரசு ஊழியர்களுக்கு 4 நாட்கள் தொடர் சிறப்பு விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவழிக்கும் வகையில் அம்மாநில அரசு தொடர்ந்து 4 நாட்களுக்கு சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
சிறப்பு விடுமுறை:
இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் தங்களின் ஊழியர்களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளது. அந்த வகையில் அண்மையில் மத்திய அரசு அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவித்தவுடன் அதன் தொடர்ச்சியாக மாநில அரசுகளும் தங்களின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி, சம்பள உயர்வு குறித்த அறிவிப்புகளை வெளியிட்டனர். ஒரு நாட்டின் அல்லது ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானதாகும். பொது மக்களுக்கும், அரசுக்கும் இடையே பலமாக செயல்பட்டு பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கு உதவுகின்றனர். கொரோனா பரவ தொடங்கியது முதல் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்திலும் அரசு ஊழியர்கள் ஓய்வின்றி பணி செய்து வந்தனர்.
TNPSC போட்டித்தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – முழு ஊரடங்கில் பயணிக்க அனுமதி! அரசு உத்தரவு!
இந்த நிலையில் தமிழகத்தில் காவலர்களுக்கு வார விடுமுறை அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அசாம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசு ஊழியர்கள் பணி சுமைக்கு மத்தியில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியாமல் உள்ளனர். இதனால் குடும்ப மற்றும் சமூக பிணைப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. இவற்றை சரி செய்யும் பொருட்டு அசாம் அரசு அரசு ஊழியர்கள் தங்களின் பெற்றோர்கள் மாமனார் மற்றும் மாமியார் குடும்பத்தினரிடம் நேரம் செலவழிக்க ஜனவரி 6, 7 ஆகிய நாட்களில் சிறப்பு விடுப்பு எடுக்க அனுமதி வழங்கியுள்ளது.
தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்? ஷாக் ரிப்போர்ட்! அரசின் முடிவு என்ன?
மேலும் இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டு ஜனவரி 8 (சனிக்கிழமை) ஜனவரி 9 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களுடன் சேர்ந்து நான்கு நாட்களுக்கு இந்த சிறப்பு விடுப்பு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தெரிவித்துள்ளார். மேலும் குறைந்தபட்சம் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய நாம் முன்வர வேண்டும். அதில் ஒன்று தான் இந்த விடுமுறை எனவும் தெரிவித்துள்ளார். விடுமுறையை பயன்படுத்தி பெற்றோர்களிடம் நேரம் செலவிட வேண்டும். அவர்களின் அன்பையும், ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.