தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்? ஷாக் ரிப்போர்ட்! அரசின் முடிவு என்ன?
ஓமைக்ரான் வைரஸ் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவதால் இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு பின் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முழு ஊரடங்கு:
கொரோனா பெருந்தொற்று தமிழகத்தில் மீண்டும் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதை தொடர்ந்து நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அதனால் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டடு பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பின் படி நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும் வருகிற ஜனவரி 9 ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவித்துள்ளது. ஹோட்டல்கள், கல்யாண மண்டபங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகளில் ஒரே நேரத்தில் 50 சதவீத நபர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு காவல்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர்.
1 முதல் 8 வகுப்புகளுக்கு ஜன.21 வரை பள்ளிகள் விடுமுறை, ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
சென்னையை விட கோவையில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் பொங்கல் பண்டிகை நாட்களில், கடை வீதிகளிலும், நிகழ்ச்சிகளிலும் கூடும் கூட்டங்களால் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் மேலும் அதிகமாகும் என்று பொதுமக்கள் அச்சமடைந்து வருகிறார்கள். எனவே பொங்கல் வரை ஞாயிறு மற்றும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி விட்டு, பொங்கலுக்கு பின் முழு ஊரடங்கை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்