Home news 1 முதல் 8 வகுப்புகளுக்கு ஜன.21 வரை பள்ளிகள் விடுமுறை, ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

1 முதல் 8 வகுப்புகளுக்கு ஜன.21 வரை பள்ளிகள் விடுமுறை, ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

0
1 முதல் 8 வகுப்புகளுக்கு ஜன.21 வரை பள்ளிகள் விடுமுறை, ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!
1 முதல் 8 வகுப்புகளுக்கு ஜன.21 வரை பள்ளிகள் விடுமுறை, ஊரடங்கு அமல் - அரசு அதிரடி உத்தரவு!
1 முதல் 8 வகுப்புகளுக்கு ஜன.21 வரை பள்ளிகள் விடுமுறை, ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

பீஹார் மாநிலத்தில் கொரோனா தொற்றின் பரவல் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் அதிகரித்து வருவதால் மாநில அரசு பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது.

ஊரடங்கு கட்டுப்பாடுகள்:

பீஹார் மாநிலத்தில் புதன்கிழமை நிலவரப்படி 24 மணி நேரத்தில் 1659 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. தற்போது, பீகாரில் மொத்தம் 3697 பேர் கொரோனா பாதிப்பினால் சிகிச்சையில் உள்ளனர். மாநிலத்தின் மொத மீட்பு விகிதம் 97.84 சதவீதம் ஆக உள்ளது. இதனால் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அரசு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தியது. அதன்படி தற்போது புதிதாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கட்டுப்பாடுகளை மக்கள் முழுமையாக கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.26 இல் சம்பள உயர்வு அறிவிப்பு? காத்திருக்கும் ஜாக்பாட்!

அரசின் உத்தரவின் படி அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி மையங்கள் மற்றும் விடுதிகள் ஜனவரி 21 வரை மூடப்பட்டிருக்கும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படும். இதற்கு முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை அரசு வெளியிட்ட அறிவிப்பில், ஜனவரி 6 முதல் 21 வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதாக அறிவித்தது. தற்போது, நர்சரி பள்ளிகள், 1 முதல் 8 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.

ஜன.7 முதல் திங்கட்கிழமை வரை வார இறுதி முழு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!

அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்படும். 9 12முதல் ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் 50 சதவீத திறனில் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டு முதல் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2ம் அலைகளின் தாக்கத்தின் காரணமாக மாணவர்களுக்கு பள்ளிகள் நேரடியாக செயல்பட வில்லை. தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் மட்டும் நடப்பதால் மாணவர்களின் கற்றைகள் திறன் பாதிக்கப்படும் என்பதால் அரசு முன்னதாக ஆலோசனை கூட்டம் நடத்தி பள்ளிகள், கல்லூரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

[table id=1078 /]

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here