கோபி பற்றிய உண்மையை ராம மூர்த்தியிடம் கூறிய எழில் – அதிரடியாக வெளியான ‘பாக்கியலட்சுமி’ ப்ரோமோ!
இதுவரையிலும் கோபியை பற்றி மறைத்து வந்த அனைத்து உண்மைகளையும் எழில், ராமமூர்த்தியிடம் கூறுவது போல வெளியாகி இருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் புதிய ப்ரோமோ ஒன்று பார்வையாளர்களின் எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.
பாக்கியலட்சுமி ப்ரோமோ
மீண்டுமாக புதிய வேகம் எடுத்துள்ள விஜய் டிவியின் ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் சில அதிர்ச்சியான சம்பவங்கள் அரங்கேற இருக்கிறது. இதுவரை இனியாவின் பள்ளியில் நடைபெற்ற சில சம்பவங்கள், தற்கொலை, போலீஸ் கேஸ் என விறுவிறுப்பாக வெளியாகி கொண்டிருந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் கதைக்களம் மீண்டுமாக கோபி, ராமமூர்த்தியின் சண்டைகளுடன் களம் காண இருக்கிறது. இதில் இருக்கும் முக்கிய ட்விஸ்ட் என்னவென்றால் ராமமூர்த்தியின் கோபத்திற்கான காரணத்தை எழில் கண்டுபிடித்தது தான்.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டை விட்டு வெளியேறிய நிரூப் – ரசிகர்கள் அதிர்ச்சி!
இந்த ‘பாக்கியலட்சுமி’ சீரியலில் கோபிக்கு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறது என்பதை முதன் முதலில் கண்டுபிடித்தது எழில் தான். ஆனால் தனது அம்மா பாக்கியாவின் நன்மைக்காக அதை வெளியே சொல்லாமல் மறைத்து விட்டார் எழில். இது ஒரு புறம் இருக்க கோபி, ராதிகாவுடன் பழகும் விஷயத்தை தெரிந்து கொள்ளும் ராமமூர்த்தியும் அதை வீட்டில் சொல்லாமல் இருக்கிறார். இப்படி இருக்க தற்போது வெளிவந்திருக்கும் ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் புதிய ப்ரோமோவில் கோபிக்கும், ராமமூர்த்திக்கும் என்ன பிரச்சனை என அனைவர் முன்னிலையிலும் வைத்து கேட்கிறார் ஈஸ்வரி.
அப்போது கோபத்தில் கத்தும் கோபி, அது என்னவென்று சொல்லுங்கள் என அப்பாவிடம் தைரியமாக கூறுகிறார். ஆனால் உண்மையை கூற முடியாமல் மழுப்பலான பதிலை சொல்லி விட்டு அங்கிருந்து செல்கிறார் ராமமூர்த்தி. இருந்தாலும் உண்மையை கண்டறியும் நோக்கத்தில் எழில், ராமமூர்த்தியிடம் சென்று பேசு பனி பெய்கிறது, நீ உள்ளே சென்று படு என்று ராமமூர்த்தி, எழிலை பேசவிடாமல் துரத்துகிறார். ஆனால், அப்பா இன்னொரு பெண்ணுடன் பேசுவது குறித்த விஷயங்கள் எல்லாம் எனக்கும் தெரியும் என எழில் கூற, ராமமூர்த்தி அதிர்ச்சியாவது போல வெளியான ப்ரோமோ ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.