TNPSC போட்டித்தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – முழு ஊரடங்கில் பயணிக்க அனுமதி! அரசு உத்தரவு!

0
TNPSC போட்டித்தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - முழு ஊரடங்கில் பயணிக்க அனுமதி! அரசு உத்தரவு!
TNPSC போட்டித்தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு - முழு ஊரடங்கில் பயணிக்க அனுமதி! அரசு உத்தரவு!
TNPSC போட்டித்தேர்வர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – முழு ஊரடங்கில் பயணிக்க அனுமதி! அரசு உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைகாரன் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு தேர்வுகளுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற குழப்பம் தேர்வர்களிடையே எழுந்துள்ளது. இது குறித்த முழு விபரங்களை இந்த பதிவில் காணலாம்.

தேர்வுகளுக்கு அனுமதி?

தமிழகத்தில் தற்போது ஓமைக்ரான் மற்றும் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா 3வது அலை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தொடர்ந்து தினசரி பாதிப்புகள் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் கடந்த ஜன.5ம் தேதி திடீரென கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும், வார நாட்களில் இரவுநேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இன்னும் சில கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் பொங்கலுக்கு பின்னர் முழு ஊரடங்கு அமல்? ஷாக் ரிப்போர்ட்! அரசின் முடிவு என்ன?

அதன்படி நேற்று முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு நேரங்களில் அத்தியாவசிய தேவை இன்றி வெளியில் வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையில் அரசுத்தேர்வுகள் மற்றும் அரசு சார்ந்த இதர பணிகள் பெரும்பாலும் ஞாயிற்று கிழமைகளில் மட்டுமே நடைபெறுகிறது. அந்த வகையில் இன்னும் சில தினங்களில் சில அரசுத்துறை சார்ந்த தேர்வுகள் அதாவது UPSC மற்றும் TNPSC தேர்வுகள் வரும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற உள்ளது. அதனால் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு என்பதால் தேர்வுக்கு தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படுமா என்ற சந்தேகம் விண்ணப்பதாரர்களிடையே எழுந்துள்ளது.

1 முதல் 8 வகுப்புகளுக்கு ஜன.21 வரை பள்ளிகள் விடுமுறை, ஊரடங்கு அமல் – அரசு அதிரடி உத்தரவு!

இந்நிலையில் எவ்வித தேர்வுகளாக இருந்தாலும் தேர்வர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்கள் தேர்வுக்கு சென்றால் அதற்கான தேர்வு மைய நுழைவுச்சீட்டை காவல்துறை அதிகாரிகளிடம் காண்பித்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு இல்லாமல் வேலை சார்ந்த பிற பணிகளுக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால் அதற்கான ஆவணங்களை அதிகாரிகளிடம் காண்பித்தல் அவசியம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வு அல்லது பிற தவிர்க்க முடியாத பணி சார்ந்து செல்வதாக இருந்தால் அதற்கான ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!