தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

0
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் இன்னும் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

வானிலை தகவல்‌

தமிழகத்தில் வடகிழக்கு பருவக்காற்றின் காரணமாக நவம்பர் மாதத்தில் பரவலாக மழை பெய்து முடிந்துள்ளது. இப்போது கோடை காலம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கோடை மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்‌சி மலை பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யயும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மகிழ்ச்சியான அறிவிப்பு!

தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளி மண்டல கீழடுக்கு சுழற்‌சி மற்றும்‌ வெப்ப சலனம்‌ காரணமாக,

27.04.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்‌சி மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

28.04.2022, 29.04.2022: கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்ச மலை பகுதி மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய மாவட்டங்கள்‌, சேலம்‌, நாமக்கல்‌, கரூர்‌, ஈரோடு மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

30.04.2022: தென்‌ தமிழகம்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திருப்பூர்‌, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம்‌, நாமக்கல்‌ மற்றும்‌ திருச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

01.05.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ்‌ மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்‌சியஸை ஒட்டி இருக்கக்கூடும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை : ஏதுமில்லை.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!