திருப்பதி ஏழுமலையான் தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – மகிழ்ச்சியான அறிவிப்பு!
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் மே மாதம் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட், நேற்று வெளியிடப்பட்டதாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.
மகிழ்ச்சியான அறிவிப்பு:
கொரோனா தொற்று காரணமாக 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டது. தொற்று பரவல் குறைந்ததால் ஜூன் மாதம் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் குறைந்த அளவில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். மீண்டும் கொரோனா 2-வது அலை காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. மேலும் திருப்பதியில் ஊரடங்கு அமலில் இருந்ததால் குறைந்த அளவு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் கூட்டம் இன்றி திருப்பதி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையில் தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததால் பக்தர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
கொரோனா தொற்றுக்கு பிறகு தற்போது தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருவதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரித்து களைகட்ட தொடங்கியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் சிறப்பு நுழைவு வாயில் வழியே செல்வதற்கான அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனாவின் தாக்கம் குறைந்து கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நீண்ட கால தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருப்பதி ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் PM KISAN திட்டத்தில் ரூ.6000 உதவித்தொகை – ஆதாரை இணைக்க ஏப்ரல் 31 கடைசி நாள்!
இந்த டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கோட்டா நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு வெளியிடப்பட்டது. இந்த டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொண்ட பக்தர்கள் தினமும் காலை 10 மணிக்கும், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மாலை 3 மணிக்கு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.தரிசனம் செய்ய வரும், மூத்த குடிமக்கள் வயது சான்றிதழ், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ், நீண்ட கால தீராத நோய் உள்ளவர்கள் மருத்துவ சான்றிதழை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.பக்தர்கள் இதை கவனத்தில் கொண்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.