பெண்களுக்கு ரக்க்ஷபந்தனை முன்னிட்டு 48 மணி நேர இலவச பேருந்து வசதி – உபி அரசு அறிவிப்பு!

0
பெண்களுக்கு ரக்க்ஷபந்தனை முன்னிட்டு 48 மணி நேர இலவச பேருந்து வசதி - உபி அரசு அறிவிப்பு!
பெண்களுக்கு ரக்க்ஷபந்தனை முன்னிட்டு 48 மணி நேர இலவச பேருந்து வசதி – உபி அரசு அறிவிப்பு!

உத்தரபிரதேசத்தில் ரக்க்ஷபந்தன் பண்டிகையை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் பெண்களுக்கு பேருந்தில் இலவச பயணம் செய்ய அனுமதி வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

ரக்ஷா பந்தன் பண்டிகை:

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக எந்த ஒரு விழாக்களும், பண்டிகைகளும் கொண்டாட மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதற்கு காரணம் கொரோனா என்னும் கொடிய நோய் தொற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நோயினை கட்டுப்படுத்த அரசு ஊரடங்கு, பொது முடக்கம் போன்ற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விதித்தது. இதனால் மக்கள் அதிகமாக கூடும் எந்த ஒரு நிகழ்ச்சிகளும் நடைபெற தடை விதிக்கப்பட்டது. அதன்படி இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு கோவில் விழாக்களும், பண்டிகைகளும் கொண்டாட முடியாத நிலை இருந்து வந்தது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததை அடுத்து மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளனர். மேலும் மத்திய அரசு அனைத்து விதமான விழாக்களும், கோவில் நிகழ்ச்சிகளும் நடத்த அனுமதி வழங்கியது. இதனையடுத்து மக்கள் அனைத்து பண்டிகைகளையும் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். அதன்படி வருகிற ஆகஸ்ட் 11 மற்றும் 12 தேதிகளில் உத்திரப்பிரதேசத்தில் ரக்ஷாபந்தன் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பிங்க் நிற பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்

ரக்ஷாபந்தன் பண்டிகை வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சிறப்பு வாய்ந்த பண்டிகையாகும். இந்த பண்டிகை சகோதர, சகோதரிகளிடையே ஒற்றுமையை வலுப்படுத்தும் விதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது இந்நாளில் பெண்கள் புது ஆடை அணிந்து அவர்களின் சகோதரர்களின் நெற்றியில் சிவப்பு குங்குமம் வைத்து இனிப்புகள் வழங்கி மணிக்கட்டில் ராக்கி என்னும் புனித கயிற்றை கட்டுவர். இதன் மூலம் சகோதர, சகோதரிகளிடையே ஒற்றுமை பலப்படும் என்று நம்பப்படுகிறது. இந்த நிலையில் இந்த பண்டிகையை முன்னிட்டு வட மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு பேருந்தில் 48 மணி நேர இலவச பயணம் செய்யும் திட்டத்தை உத்திரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இதன்படி ஆகஸ்ட் 10 நள்ளிரவு தொடங்கி ஆகஸ்ட் 12 நள்ளிரவு வரை 48 மணி நேரம் பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணம் செய்யலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!