தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பிங்க் நிற பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

0
தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பிங்க் நிற பேருந்துகள் - இன்று முதல் இயக்கம்!
தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பிங்க் நிற பேருந்துகள் - இன்று முதல் இயக்கம்!
தமிழகத்தில் பெண்களுக்கான இலவச பிங்க் நிற பேருந்துகள் – இன்று முதல் இயக்கம்!

தமிழ்நாடு முழுவதும் நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலில் உள்ளது. இதற்காக மகளிர் பயணம் செய்ய கட்டணமில்லை என நோட்டீஸ் பேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இலவச பயண பேருந்துகளை எளிதில் அடையாளம் காண பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிங்க் நிற பேருந்துகள்:

தமிழகத்தில் கடந்த ஆண்டு திமுக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தது. இதனை தொடர்ந்து பொதுமக்கள் நலன் கருதி முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுத்தி வரும் திட்டங்கள் பொது மக்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. முக்கியமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதாவது கடந்த வருடம் ஜூலை 8 ஆம் தேதி முதல் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு அரசு பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் பெண்களுக்கு பயணச்சீட்டும் வழங்கப்பட்டு வருகிறது. அதில், மகளிர் கட்டணமில்லா பயணச்சீட்டு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான பெண்கள் பயணம் மேற்கொண்டு வருவதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் வெள்ளை நிற போர்டு கொண்ட பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் சில பெண்கள் அவசரத்தில் இலவச பயணத்திற்காக டீலக்ஸ், சொகுசு பேருந்துகளில் ஏறி விடுகின்றனர். இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டு வருகிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக தமிழக அரசு, சூப்பர் தீர்வு ஒன்றை அறிவித்திருந்தது. அதன்படி, பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கையர் எளிதில் அடையாளம் காணும் வகையில், கட்டணமில்லா பயணச் சலுகை பேருந்துகளுக்கு பிங்க் கலர் பூசப்படும் என்றும் அதற்கான வேலைகள் மும்முரமாக நடப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.

TNUSRB SI (Taluk & AR) எழுத்து தேர்வு மதிப்பெண்கள் 2022 – வெளியீடு

அதன்படி, பிங்க் நிற பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. அதாவது சென்னை மெரினா கடற்கரையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அலுவலகம் அருகே போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் பிங்க் பேருந்துகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. மேலும் சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் பிங்க் கலர் பேருந்துகளை தொடங்கி வைக்கிறார். இதையடுத்து ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை மெட்ரோ ரயில் நிலைய வளாகத்தில் இருந்து பிற மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு 5 இணைப்பு மினி பேருந்துகள் இயக்கத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!