Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!

0
Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் - சூப்பர் சேமிப்பு திட்டம்!
Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் - சூப்பர் சேமிப்பு திட்டம்!
Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!

Post Office இல் தற்போது மக்களால் அதிகம் வரவேற்கப்பட்டு வருகின்ற பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தை தொடங்குவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படுகிறது மற்றும் எவ்வளவு முதலீடு செய்தால் எவ்வளவு முதிர்வு தொகை கிடைக்கும் என முழு விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர் சேமிப்பு திட்டம்:

இந்தியாவில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இந்த வகையில் கடந்த கொரோனா இரண்டாம் அலையின் போது நாடு முழுவதும் அதிக பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. அதனை எதிர்கொள்ளும் விதமாக மக்கள் இப்போது சேமிப்பு திட்டங்களில் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். வங்கிகளுக்கு இணையாக தபால் நிலையங்களில் அதிக சிறுசேமிப்பு திட்டங்கள் உள்ளன. இந்நிலையில் தபால் நிலையங்களில் மக்களால் அதிகம் வரவேற்பு பெற்ற சிறுசேமிப்பு திட்டங்கள், டைம் டெபாசிட் திட்டம், ரெக்கரிங் டெபாசிட், சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, போஸ்ட் ஆபீஸ் மாத வருமான திட்டம் ஆகிய திட்டங்கள் ஆகும்.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி சான்றிதழ் வழங்கப்படும்!

இந்த வகையில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் மக்கள் அதிகம் முதலீடு செய்து வருகின்றனர். இந்த திட்டத்தை சம்பளம் பெறுபவர்கள், சுயதொழில் செய்பவர்கள், ஓய்வூதியம் பெறுபவர்கள் என அனைவரும் தொடங்கலாம். இத்திட்டம் தொடங்குவதற்கு அடையாள சான்று, முகவரி சான்று, பான் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பதிவு படிவம் E ஆகிய ஆவணங்கள் கட்டாயம். PPF திட்டத்தில் தினமும் 417 ரூபாய் என்றால் மாதம் 12500 ரூபாய் முதலீடு, ஒரு ஆண்டுக்கு மொத்தம் 1.5 லட்சம் ரூபாய் முதலீடு செய்து 40 லட்சம் வரை முதிர்வுத் தொகையாக பெறலாம். இந்த திட்டத்தின் முதிர்ச்சி காலம் 15 ஆண்டுகள் மற்றும் 7.1% வட்டி கிடைக்கிறது.

ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

இதன் அடிப்படையில் முதிர்ச்சி காலத்துடன் 5 ஆண்டுகள் கூடுதலாக ஒன்றரை லட்சம் ஆண்டுதோறும் முதலீடு செய்து வந்தால் முதலீடு செய்த மொத்த தொகை 37.50 லட்சமாக இருக்கும். இதற்கு 7.1 % வட்டி தொகையுடன் கணக்கிட்டால், 65.68 லட்சம் ரூபாய் கிடைத்திடும். அந்த வகையில் மீண்டும் கூடுதலாக 5 ஆண்டுகள் என மொத்த 25 ஆண்டு முதலீடு செய்தால் முதிர்வு தொகை 1.03 கோடி ரூபாய் கிடைக்கும். இத்திட்டம் சிறிய முதலீட்டில் அதிக லாபம் தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!