தமிழக அரசு சார்பில் மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!

0
தமிழக அரசு சார்பில் மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு - முதல்வர் உத்தரவு!
தமிழக அரசு சார்பில் மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு - முதல்வர் உத்தரவு!
தமிழக அரசு சார்பில் மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தி உள்ளது. இதனை தொடர்ந்து கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வு:

தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் உள்ளிட்டவர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி 110வது விதியின் கீழ் முதல்வர் சட்டமன்ற பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி ஜனவரி 1ம் தேதி முதல் அகவிலைப்படியில் 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பொங்கல் திருநாளை முன்னிட்டு C மற்றும் D பிரிவு பணியாளருக்கு பொங்கல் பரிசாக 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.

Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!

அத்துடன் பொங்கல் பரிசாக ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்க உள்ளதாகவும், சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ரூ.1000 வழங்க உள்ளதாகவும் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெறும் ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்க உள்ளதாகவும் அரசு ஆணையிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோயிலில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி சான்றிதழ் வழங்கப்படும்!

அதன்படி திருக்கோயிலில் பணிபுரியும் நிரந்தர பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 17% லிருந்து 31% சதவீதமாக அதிகரிக்கப்படும். அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 14 சதவீத அகவிலைப்படி உயர்வு திருக்கோயிலில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் உயர்த்தி வழங்கி உள்ளது. அத்துடன் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயில் பணியாளர்களுக்கான பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டது. இதனை ரூ.2000 ஆக உயர்த்தி வழங்க உள்ளதாக தமிழக முதலமைச்சர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதனால் கோவில் பணியாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!