தமிழக காவல் துறையில் 2021ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் – நீதிமன்றம் கேள்வி!
தமிழக காவல் துறையில் 2021ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு அரசு தரப்பில் இருந்தும் பதிலளிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை:
தமிழக காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு சீருடை பணியாளர் (TNUSRB) தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். அதன்படி கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்றது. தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்பட்டு அடுத்தகட்ட உடல் தகுதித்தேர்வு நடத்த திட்டமிட்டு கொண்டிருக்கும் நிலையில் கொரோனா இரண்டாம் அலை வேகமெடுத்ததால் தேர்வானது ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஜூலை மாதம் உடற்தகுதித்தேர்வு முன்னேற்பாடு பணிகளுடன் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடைபெற்றது.
தமிழக அரசு சார்பில் மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!
அதனை தொடர்ந்து TNPSC தேர்வாணையம் 2022ம் ஆண்டுக்கான தேர்வுகால அட்டவணையை வெளியிட்டது. குரூப் 2 மற்றும் 4 தேர்வு அறிவிப்புகள் 2022 பிப்ரவரி மற்றும் மார்ச் மாதம் வெளியாகும் இரு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காவல்துறையில் 2021ம் ஆண்டுக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Post Office இல் தினமும் 417 ரூபாய் சேமித்தால் ரூ.40 லட்சம் வரை ரிட்டன்ஸ் – சூப்பர் சேமிப்பு திட்டம்!
உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் படி காவல் துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் 2020ம் ஆண்டு 11,181 பணியிடங்களுக்கு தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் இருந்து விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காவல் ஆணையம், மாநில பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளன எனவும் தமிழக அரசு பதிலளித்துள்ளது.