தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு 10, 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

2
தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு 10, 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு 10, 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை திட்டம்!
தமிழகத்தில் பொங்கலுக்கு பிறகு 10, 12ம் வகுப்புகளுக்கு விடுமுறை – பள்ளிக்கல்வித்துறை திட்டம்!

தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்களுகும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை முக்கிய முடிவெடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ஆன்லைன் வகுப்புகள்:

தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2ம் அலையின் பாதிப்பு காரணமாக நேரடி வகுப்புகள் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தடை செய்யப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டது. தொடர்ந்து ஒன்றரை ஆண்டுகளாக இதே செயல்முறை மட்டுமே நீடித்து வந்தது. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு அகமதிப்பீடு முறையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் இருப்பதாக பல பெற்றோர்களும், ஆசிரியர்களும் கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.

தமிழக காவல் துறையில் 2021ம் ஆண்டுக்கான காலிப்பணியிடங்கள் – நீதிமன்றம் கேள்வி!

இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டது. இதன் முடிவுகளின் அடிப்படையில் நவம்பர் 1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரையில் பள்ளிகள் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கு வகுப்புகள் ஆரம்பித்த தொடக்க நாட்களில் அவர்களுக்கு அடைப்படை கல்வி பற்றிய நினைவூட்டல் நடத்தப்பட்டது. தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் 3ம் அலை பரவல் தொடங்கியிருக்கிறது. இதனால் மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதால் முன்னதாகவே பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் மீண்டும் அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிப்பு – முதல்வர் உத்தரவு!

அதிலும் 1 முதல் 9ம் வகுப்பு மற்றும் கல்லூரி மாணவர்கள் என்று அனைத்து வகுப்புகளும் நேரடி வகுப்புகள் நடத்த தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மருத்துவ மாணவர்களுக்கு வழக்கம் போல் கல்லூரிகள் செயல்படுகிறது. அதேபோல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இது தொடர்பாக அவர்களுக்கும் ஆன்லைன் வகுப்புகள் நடத்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றது. இதற்கு பதில் அளித்த தமிழக அரசு மாணவர்கள் முதல் தவணை தடுப்பூசி எடுத்துக் கொள்ளவே பள்ளிக்கு அழைக்கப்படுவதாகவும், நேரடி வகுப்புகள் கட்டாயமில்லை என்றும் தெரிவித்துள்ளது. மேலும், பொங்கல் விடுமுறைக்கு பின்னர் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்த பள்ளிக்கல்வித்துறை முடிவெடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!