Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி சான்றிதழ் வழங்கப்படும்!

0
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - வட்டி சான்றிதழ் வழங்கப்படும்!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு - வட்டி சான்றிதழ் வழங்கப்படும்!
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – வட்டி சான்றிதழ் வழங்கப்படும்!

அஞ்சலத்தில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய உதவும் வகையில் நிதியாண்டு வட்டி சான்றிதழ் அளிக்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வட்டி சான்றிதழ்:

இந்தியாவில் வங்கிகளுக்கு இணையாக மக்கள் அஞ்சலத்தில் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் பல சேமிப்பு திட்டங்களை அஞ்சலகங்கள் அறிமுகப்படுத்தி வருகிறது. வைப்பு நிதி, தொடர் வைப்புக் கணக்கு, கால வைப்புக் கணக்கு, முதியோருக்கான சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானத் திட்டம் செல்வ மகள் திட்டம் போன்ற திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அஞ்சலகங்களில் உள்ள சேமிப்பு திட்டங்களில் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி விதிமுறைகளும் வட்டி விகிதங்களும் உள்ளது. இதனால் மக்கள் அதிக அளவில் அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஜனவரி 31 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை – மாநில அரசு உத்தரவு!

இந்த நிலையில் அஞ்சல் வாடிக்கையாளர்களுக்கு தேவைப்பட்டால் நிதியாண்டு அடிப்படையில் வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல்துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சிறு சேமிப்பு திட்டங்களில் வழங்கப்படும் வட்டி தொகை அவர்களின் அஞ்சல் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து வருமான ஒரு செலுத்தும் வாடிக்கையாளர்கள் ஒரு நிதியாண்டிற்கான வட்டி விகித சான்றிதழை அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு கோர் பேங்கிங்கில் இணைக்கப்பட்ட போஸ்ட் ஆபீஸில் சேமிப்பு கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை முடிவு செய்துள்ளதாக வந்துள்ளது

தமிழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு காமராஜர் பல்கலை வேலைவாய்ப்பு – சூப்பர் அறிவிப்பு!

மேலும் வட்டி சான்றிதழுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்ற தகவல்களும் வந்ததுள்ளது. வட்டி சான்றிதழ் வழங்க அஞ்சல் துறை முயற்சி எடுத்து வருவதாகவும், கூடிய விரைவில் வட்டி சான்றிதழ் அளிக்கப்படும். இதன் மூலம் வருமான வரி செலுத்துவோர் பயன் பெறுவர் அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்த விவரங்களுக்கு வாடிக்கையாளர்கள் அஞ்சல் நிலையத்தை தொடர்பு கொண்டு அறியலாம்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!