தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை – போக்குவரத்துத்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தமிழ் வருட பிறப்பையொட்டி நாளையும், புனித வெள்ளியையொட்டி நாளை மறுதினமும் அரசு விடுமுறை ஆகும். இதையடுத்து வார விடுமுறை வருவதால் தொடர் விடுமுறைக்காக அதிக அளவிலான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்வர் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் 1200 சிறப்புப் பேருந்துகள் இயக்க உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்து உள்ளது.
சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 50-க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. சில மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்களாக தொடர்ந்து இருந்து வருகிறது. இந்த நிலையில் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கிக்கொள்ளப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் பண்டிகைகள், திருவிழாக்கள் கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த வாரம் தொடர்ந்து விடுமுறை வாரமாக காணப்படுகிறது. ஏனென்றால் நாளை தமிழகத்தில் தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழகமெங்கும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல் – கோட்டாட்சியர் உத்தரவு!
இந்த நிலையில் வருகிற வெள்ளிக்கிழமை புனித வெள்ளியும் வர உள்ளதால் அன்றைய தினமும் தமிழகத்தில் விடுமுறையாக காணப்படுகிறது. அதன் பின்னர் ஞாயிற்றுக்கிழமை வருகிறது. நடுவில் உள்ள சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பெரும்பாலான நிறுவனங்கள் விடுமுறை அறிவித்துள்ளன. இதனால் இந்த நான்கு நாட்கள் விடுமுறையை கொண்டாடுவதற்கு வெளியூர்களில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்புகின்றனர். அவர்களுக்கு பயனுள்ள வகையில் கிட்டத்தட்ட 1200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, ஈஸ்டர் உள்ளிட்ட தொடர் விடுமுறை நாட்களில் தமிழகமெங்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு நாள்தோறும் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளுடன் கூடுதலாக 1,200 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. மேலும் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம், சேலம், கும்பகோணம், மதுரை போக்குவரத்து கழகங்களின் சார்பில் கூடுதல் பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட உள்ளன. இதையடுத்து 16ந்தேதி சித்ரா பவுர்ணமியையொட்டி விழுப்புரம் போக்குவரத்து கழகம் சார்பில் மட்டும் கூடுதலாக 500 பஸ்கள் கோயம்பேட்டில் இருந்து விடப்படுகிறது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக 17ஆம் தேதி அனைத்து முக்கிய நகரங்களில் இருந்தும் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.