இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தான் வேலை – அரசின் சூப்பர் திட்டம்! விரைவில் அமல்!

0
இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தான் வேலை - அரசின் சூப்பர் திட்டம்! விரைவில் அமல்!
இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தான் வேலை - அரசின் சூப்பர் திட்டம்! விரைவில் அமல்!
இனி வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தான் வேலை – அரசின் சூப்பர் திட்டம்! விரைவில் அமல்!

கொரோனா பாதிப்பு காரணமாக அனைத்து நிறுவனங்களும் வேலை முறைகளை மாற்ற மறுபரிசீலனை செய்து வருகிறது. அந்த வகையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அறிவித்துள்ளது.

சூப்பர் அறிவிப்பு:

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வருகைக்கு பின்பு வேலை கலாச்சாரம் பெரும் தாக்கத்தை சந்தித்துள்ளது. அந்த வகையில் கொரோனா காலகட்டத்தில் WORK FROM HOME முறை அமலில் இருந்தது, இந்த முறையை தொடரும் வகையில் வாரத்தில் நான்கு நாள் வேலை செய்யும் முறையும் நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகி வந்தது. இந்த தகவல்களை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த, 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஐரோப்பிய நாடான ஸ்காட்லாந்து, சோதனை அடிப்படையில் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தது.

வேலை இல்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு ரூ.7,500 உதவித்தொகை – அதிபர் அறிவிப்பு!

இருப்பினும் முதல் முதலாக 2021ம் ஆண்டு டிசம்பர்-ல் மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நான்கு நாள் வேலையை அதிகாரப்பூர்வமாக அமல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது . இதனை தொடர்ந்து ஐஸ்லாந்து, ஸ்பெயின், ஜப்பான் ஆகிய நாடுகளும் சோதனை அடிப்படையில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்தது, இந்த திட்டம் பொதுமக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த திட்டத்தின் சிறப்பம்சங்கள், ஊதியக் குறைப்பு இல்லை, ஒரு வாரத்திற்கு, 38 மணி நேரப் பணி, ஒரு வாரத்தில் கூடுதல் நேரம் பணியாற்றி அடுத்த வாரம் குறைத்துக் கொள்ளலாம், வேலை நேரம் முடிந்த பின் கம்ப்யூட்டர் உள்ளிட்ட சாதனங்களை அணைத்து விடலாம் என்பது ஆகும்.

தமிழகத்தில் 4 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

இந்நிலையில், ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் வாரத்தில் நான்கு நாள் வேலை திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து நான்கு நாள் வேலை திட்டம், பார்லி ஒப்புதலுக்குப் பின், வரும் மே அல்லது ஜூன் மாதத்தில் அமலுக்கு வரும் என்று தெரிகிறது. கொரோனா காலத்தில் பணிச்சூழல் மாறியதற்கு ஏற்ப, தொழிலாளர் சந்தையும் மாற வேண்டியுள்ளது. மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, குடும்பத்திற்கும்,வேலைக்கும் சமமான நேரம் ஒதுக்கும் நோக்கில் இத்திட்டம் அமலுக்கு வர உள்ளது என்று பெல்ஜியம் பிரதமர் அலெக்சாண்டர்- டி-க்ரூ தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!