தமிழகத்தில் 4 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

0
தமிழகத்தில் 4 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் 4 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் 4 நாட்கள் மதுபான கடைகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி அன்று நடைபெற உள்ளது. அதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுபான கடைகளுக்கு 4 நாட்களுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

மதுபான கடை விடுமுறை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத்திற்கும் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை வருகிற 19ம் தேதி அன்று நடத்த உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற 22ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

சென்னை: அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

அதனால் தேர்தலை முன்னிட்டு பல்வேறு பொது கூட்டங்கள் மற்றும் பிரச்சாரங்கள் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா பரவல் உள்ள சூழலில் தேர்தலை மேலும் கொரோனா பரவாத தேர்தலாக நடத்த வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அத்துடன் தேர்தல் நடத்த விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடைபெற வேண்டும் என்றும் கூறியுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்கும் வகையில் பிப்ரவரி 19ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தலை பாதுகாப்பான முறையில் நடத்த வேண்டும் என்று அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழகத்தில் நாளை (பிப்.18) பள்ளிகளுக்கு விடுமுறை? முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அங்குள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேர்தல் நடைபெறும் இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் உள்ள மதுபான கடைகளுக்கு பிப்ரவரி 17ம் தேதி காலை 10 மணி முதல் 19ம் தேதி வரை மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22ம் தேதி அன்றும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விதி அனைத்து தனியார் கடைகளுக்கும் பொருந்தும். மேலும் இதனை மீறி செயல்படும் கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!