தமிழக அரசுத்துறையில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தகவல்!

0
தமிழக அரசுத்துறையில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் - ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தகவல்!
தமிழக அரசுத்துறையில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் - ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தகவல்!
தமிழக அரசுத்துறையில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் – ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தகவல்!

தமிழக அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு ஏராளமான வேலைவாய்ப்புகள் குறித்த அறிவிப்பு வெளியான வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அரசு ஊழியர் சங்க பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.

காலிப்பணியிடங்கள்:

தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வந்ததை அடுத்து அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் வேலையிழந்தோர் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வந்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் TNPSC தேர்வாணையம் போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி கடந்த மே மாதம் குரூப் 2 முதல்நிலைத் தேர்வு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அடுத்ததாக ஜூலை 24ம் தேதி TNPSC குரூப் 4 & VAO தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு துறைகளில் 4.5 லட்சம் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அரசு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Exams Daily Mobile App Download

கடந்த ஜூன் மாதம் சுமார் 7,000 அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதில் சென்னை தலைமை செயலகத்தில் மட்டும் 46 பேர் ஓய்வு பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து இந்த வருடத்தில் மட்டும் சுமார் 25,000 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஓய்வு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் ஆண்டுகளில் அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்கள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது 2019 ஆண்டு நிலவரப்படி அங்கு பதிவு செய்து காத்திருப்போரில் 24 வயதிற்கு மேற்பட்டவர்கள் 40 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். இவர்களுக்கு பணி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு வெளியீடு!

கொரோனா பாதிப்பால் ஏராளமான மக்கள் வேலையிழந்து தவித்து வருகின்றனர். இந்த நேரத்தில் அரசுத்துறை காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுகள் ஏதும் நடைபெறாததால் அரசு வேலை வாங்க வேண்டும் என்று கனவோடு இருந்தவர்கள் ஏமாற்றத்தை சந்தித்தனர். தற்போது வழக்கம் போல போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அத்துடன் தற்போது ஓய்வு பெறும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் இளைஞர்கள் அதிக அளவில் அரசு வேலை பெறும் சூழல் உருவாகியுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!