சென்னையில் நாளை மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு வெளியீடு!
சென்னைக்கு உட்பட்ட வியாசர்பாடி, ஐடி காரிடார், கிண்டி, பெரம்பூர், தாம்பரம், அம்பத்தூர், போரூர், ஆவடி, கே.கே.நகர், தி.நகர் ஆகிய பகுதிகளில் மின் பராமரிப்பு நடைபெறுவதால் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை
தமிழகத்தில் மாதம் ஒரு முறை மின் தடை செய்யப்பட்டு தமிழ்நாடு மின் வாரியம் மின் நிலையங்களில் ஏற்படும் குறைபாடுகளை சரி பார்த்து வருகின்றனர். அதன்படி நாளை சென்னையில் பல்வேறு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு மின் சார்ந்த பணிகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர். தாம்பரம் பகுதிகளான ராகவேந்திரா நகர் – விஜிபி பிரபு நகர், வீரத்தாமன் கோயில் தெரு, ஜெகநாதபுரம்; மடிப்பாக்கம் – 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு, துரைசாமி தெரு, தர்மராஜா கோயில் தெரு, அன்பு நகர், சரஸ்வதி தெரு, பாலமுருகன் தெரு மற்றும் சுப்பிரமணி தெரு மற்றும் கோவிலம்பாக்கம் – வடிவேல் நகர், கோபால் நகர், விஜயலட்சுமி நகர், இந்திரா நகர்; செம்பாக்கம் – மாடம்பாக்கம் மெயின் ரோடு, சுதர்சன் நகர், ஸ்ரீதேவி நகர், அம்பிகா நகர்; பெருங்களத்தூர் – காந்தி சாலை, கட்டபொம்மன் தெரு, ராஜீவ் காந்தி தெரு, காமராஜர் நகர்.
Exams Daily Mobile App Download
மேலும், போரூர் பகுதிகளான மைக்ரோ எஸ்டேட், பெருமாள் நகர் மற்றும் அருணகிரி நகர்,திருநீர்மலை மெயின் ரோடு, மகாலட்சுமி நகர் மற்றும் கிண்டி பகுதிகளில் டிஜி நகர், புழுதிவாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம் மற்றும் மூவரசம்பேட்டை, ராஜ் பவன், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை. தண்டையார்பேட்டை பகுதிகளான ஜெயபால் நகர், பெருமாள் கோயில் தெரு கடப்பாக்கம்; டோல்கேட் – பொன்னுசாமி தெரு, சுடலைமுத்து தெரு, கோவிந்தராஜ் தெரு மற்றும் வீரராகவன் சாலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் சாத்தாங்காடு – காமராஜர் சாலை, பாடசாலை, ராமசாமி நகர், ராஜாஜி நகர், ஜெயலலிதா நகர், பெரியார் நகர். வியாசர்பாடி பகுதிகளான லெதர் எஸ்டேட், ரவி கார்டன், மேத்தா நகர், பழனியப்பா நகர் மற்றும் கண்ணபுரம் பகுதிகள் மற்றும் கே.கே.நகர் பகுதிகளில் வளசரவாக்கம், ஆழ்வார்திருநகர், விருகம்பாக்கம், கே.கே.நகர், அசோக் நகர், வடபழனி மற்றும் அழகிரி நகர்.
மத்திய பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு தேதி அறிவிப்பு 2022 – முழு விபரங்கள் இதோ!
அதனைத்தொடர்ந்து, தி.நகர் பகுதிகளில் ராமநாதன் தெரு, ராமேஸ்வரம் சாலை, கோயில் கோபுரம், கிவ்ராஜ் கட்டிடம்; மாடல் ஹட்மென்ட் சாலை 1 முதல் 6வது குறுக்குத் தெரு, அப்துல் அஜீஸ் தெரு, தெற்கு தண்டபாணி தெரு, மேற்கு மாம்பலம் – நரசிம்மன் தெரு மற்றும் பெரம்பூர் மூர்த்தி நகர், லட்சுமி நகர், வி கே எம் நகர், வடக்கு திருமலை நகர், காமராஜ் நகர், மாதவரம் மெயின் ரோடு, செயின்ட் மேரிஸ் சாலை, என் எஸ் கே தெரு, தன்ராஜ் புரம், ராஜன் நகர் 3வது தெரு, துரைசாமி தெரு, பந்தர் கார்டன் முழுப் பகுதி, பேப்பர் மில்ஸ் சாலை, வேணுகோபால் தெரு மற்றும் பெரம்பூர் பகுதிகளான சாஸ்திரி நகர் 1 முதல் 5 வது தெரு, அருள் நகர் மெயின் ரோடு, பின்னி நகர் மெயின் ரோடு, சுப்பிரமணி கார்டன், ரேகா நகர், குமரன் நகர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் மட்டுமின்றி ஆவடியிலும் சிடிஎச் சாலை, சரஸ்வதி நகர், ஆர்த்தி நகர், தென்றல் நகர், வசந்தம் நகர், விவேகானந்த நகர் மற்றும் ஏஜிடி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.