தமிழக அரசு ஊழியர்களுக்கு விரைவில் 3% அகவிலைப்படி உயர்வு – வலுக்கும் கோரிக்கை!
கொரோனா தொற்று ஓரளவு குறைந்து, அரசின் வருமானமும் அதிகரித்துள்ள நிலையில்,மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்களுக்கும் அளிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
விரைவில் அகவிலைப்படி உயர்வு:
அண்மையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான அகவிலைப்படி உயர்வை தமிழக அரசு ஊழியர்களுக்கும் அளிக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ள தகவல் தற்போது வைரலாகி வருகிறது. மாநில அரசு ஊழியர்களுக்கும், மத்திய அரசு பணியாளர்களுக்கு கொடுப்பது போன்றே சம்பளம் இருக்க வேண்டும் என்பது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், 2020-ம் ஆண்டு கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாயில் மிகுந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனையடுத்து, 1.1.2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு நிறுத்தி வைத்தது, இந்த அகவிலைப்படி உயர்வை வழங்குவது குறித்து 1.7.2021-க்கு பிறகு முடிவு எடுக்கப்படும் என்றும், அவ்வாறு முடிவு எடுக்கும் போது 1.1.2020 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு அதன் பணப் பயன் 1.7.2021 முதல் அளிக்கப்படும் என்றும் அறிவித்தது. அதே சமயத்தில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் காரணமாக, தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 17 சதவிகிதத்தில் இருந்து 31 விழுக்காடாக 1.1.2022 முதல் தான் ரொக்கமாக வழங்கப்படுகிறது. அதாவது, மத்திய அரசு ஊழியர்களுக்கு 1.7.2021 முதல் வழங்கப்பட்ட 31 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு 1.1.2022 முதல் ஆறு மாத காலம் தாமதமாக வழங்கப்பட்டது.
வருவாய் துறையில் அலுவலக உதவியாளர் வேலை – 8ம் வகுப்பு தேர்ச்சி போதும்..!
தற்போது 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி மத்திய அரசு 31.3.2022 அன்றே அறிவித்துவிட்டது. எனவே,தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 01-01-2022 முதல் 31 விழுக்காட்டிலிருந்து 34 விழுக்காடாக, அதாவது மூன்று விழுக்காடு உயர்த்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.