மாநில அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு - முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மாநில அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

சமீபத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி (DA) உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து தற்போது பீகார் மாநில அரசும் தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

சம்பளம் உயர்வு

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மீண்டும் மகிழ்ச்சி அளிக்கும் செய்தியாக அகவிலைப்படி தொகை 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து முதல்வர் நிதிஷ் தலைமையிலான பீகார் மாநில அரசும், தனது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அந்த வகையில் ஜனவரி 1, 2022 முதல் இந்த உயர்த்தப்பட்ட DA கொடுப்பனவின் பலனை அரசு ஊழியர்கள் பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநில அரசு ஊழியர்களின் டிஏ, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாறியுள்ளது.

TN TRB ஆசிரியர் தகுதித்தேர்வு குறித்த ஷாக் அறிவிப்பு – தவறவிடும் 50,000+ மாணவர்கள்!

இதற்கு முன்னதாக பீகார் மாநில அமைச்சரவையில் DA உயர்வுக்காக நிதியமைச்சகம் முன்மொழிந்திருந்த நிலையில், அதற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1133 கோடி கூடுதல் சுமை ஏற்பட இருக்கிறது. இதனுடன், பீகார் தற்செயல் நிதியின் வரம்பு மார்ச் 30 வரை தற்காலிகமாக 350 கோடியிலிருந்து 9500 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், தானியக் கொள்முதல் பணிகளில் மானியத் தொகை அதிகரித்தால், அதை மீண்டும் அமைச்சரவைக்கு அனுப்பாமல், ஒப்புதல் அளிக்கத் துறைக்கு உரிமை உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர பீகார் மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிற்சாலைகளுக்கு நியாயமான விலையில் நிலக்கரி வழங்குவதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஏஜென்சிக்கு 3 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம், 43 கோடியில் தீயணைப்பு வாகனங்கள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர, மும்பையில் உள்ள முதலீட்டு ஆணையர் அலுவலகத்திற்கும், 2022-23 நிதியாண்டில் மூன்று கோடியே 23 லட்சம் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய கலால் கொள்கை உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!