தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு 30 நாட்கள் விடுமுறை – 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு நாளை தொடக்கம்!
தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. அதன்படி இன்று 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டுக்கான கடைசி வேலை நாளாகும். நாளையுடன் கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் காரணமாக நடப்பு கல்வியாண்டு தாமதமாக தொடங்கப்பட்டது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஆரம்பமானது. இதையடுத்து 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் வழக்கம் போல நேரடி வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் ஓமைக்ரான் வைரஸ் காரணமாக தமிழகத்தில் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதால் மீண்டும் பள்ளிகள் ஜனவரி மாதம் முழுவதும் மூடப்பட்டது. இதையடுத்து தொற்று பரவல் குறைந்த பிறகு கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் வகுப்புகள் நடைபெற்றது.
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் மதிப்பீடு குறித்த முக்கிய அறிவிப்பு!
இதையடுத்து இந்த கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தப்படி கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டபடி 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. அத்துடன் தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியுள்ளதால் மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தார்கள். அத்துடன் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் பெற்றோர்களும் மாணவர்களை பள்ளிகளுக்கு அனுப்புவதில் தயக்கம் காட்டி வந்தனர்.
Exams Daily Mobile App Download
அதனால் மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்ற பள்ளிக்கல்வித்துறை, தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 14ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்தது. அதன்படி 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்றுடன் பள்ளி வேலை நாள் நிறைவடைந்துள்ளது. மேலும் இவர்களுக்கு நாளை முதல் ஜூன் 12ம் தேதி என ஒரு மாத காலத்திற்கு விடுமுறை என்பதால் மாணவர்கள் குஷியாக உள்ளார்கள். அடுத்த கல்வியாண்டு வருகிற ஜூன் 13ம் தேதி முதல் தொடங்கப்படும் என்றும் அடுத்த கல்வியாண்டு முழு பாடத்திட்டத்தை கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.