தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் மதிப்பீடு குறித்த முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - விடைத்தாள் மதிப்பீடு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு - விடைத்தாள் மதிப்பீடு குறித்த முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – விடைத்தாள் மதிப்பீடு குறித்த முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. மேலும் 1 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு இறுதித்தேர்வுகள் இன்றுடன் முடிவடைகிறது. இந்நிலையில் 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு பணி குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

முக்கிய அறிவிப்பு:

தமிழகத்தில் கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்ததால் மீண்டும் பிப்ரவரி1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைப்பட்டு வந்தன. அதை தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. அந்த நிலையில் 2 ஆண்டுகளாக பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது, இந்த கல்வி ஆண்டிலாவது தேர்வுகள் நடைபெறுமா என்ற கேள்வி பல தரப்பிலிருந்து எழுப்பப்பட்டது.

தமிழகத்தில் 15 நாட்களில் ஆன்லைன் வழியாக ரேஷன் கார்டு பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!

அந்த சமயத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். இந்நிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 5 ஆம் தேதி தொடங்கி மே 28 ஆம் தேதி முடியும், 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 9 முதல் 31 வரை, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மே 6 முதல் 30 வரை என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். அதன்படி, 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த வாரம் தொடங்கியது. மேலும் 11-ம் வகுப்பு பொதுத் தேர்வு மே 9ம் தேதி தொடங்கின.

மாநிலம் முழுவதும் அதிகரித்து வரும் வெப்ப அலை மற்றும் அக்னி வெயில் காரணமாக,1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள், தேர்வு நாளில் மட்டும் பள்ளிக்கு வந்தால் போதும் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது. அந்த வகையில் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே 5ல் ஆண்டு இறுதித் தேர்வுகள் தொடங்கி, இன்றுடன் முடிகிறது. அந்த வகையில், நாளை 14ம் தேதி முதல் ஒரு மாதம் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Exams Daily Mobile App Download

இந்த கோடை விடுமுறை நாட்களில், பள்ளிகள் செயல்படாது, விடுமுறை நாட்களில் விருப்பப்படும் மாணவர்களுக்கு மட்டும், இல்லம் தேடி கல்வி திட்டத்தில், அவரவர் வீடுகளின் அருகில் உள்ள இடங்களில், சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில் 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு செய்ய பணி மூப்பு அடிப்படையில் முதுகலை ஆசிரியர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் பட்டியலில் திருத்தம், பெயர் விடுபட்டிருந்தால் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவிக்கலாம் என சென்னை முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!