மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 3% DR உயர்வு – யாருக்கெல்லாம் பலன் கிடைக்கும்? முழு விவரம் இதோ!
சமீபத்திய அறிவிப்பின்படி, மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கான டிஆர் 3 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலையில் இதன் மூலம் சுமார் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை (DA) 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக அரசு உயர்த்தியுள்ளது. இதனுடன் சேர்ந்து ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணமும் (DR) 3 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த DR உயர்வானது ஜனவரி 1, 2022 முதல் செலுத்தப்படும் என அறிக்கைகள் தெரிவித்துள்ளது. இப்போது DA மற்றும் DR உயர்வு மூலம் 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNPSC Group 4 VAO தேர்வுக்கு தயாராகி வருவோர் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!
வழக்கமாக பணவீக்கம் அதிகரித்து வரும் பின்னணியில் தான் அரசு ஊழியர்களுக்கான DA உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் பணவீக்கம், உணவுப் பொருள் மற்றும் எரிபொருள் விலை ஆகியவை சாமானியர்களின் தோள்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மத்திய அரசு தனது 47 லட்சம் ஊழியர்கள் மற்றும் 68 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு DA உயர்வை அதிகரித்திருக்கிறது. இதற்கிடையில் சமீபத்திய அரசாங்க மதிப்பீடுகள் மார்ச் 2022 இல் நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) 6.95 சதவீதத்தைத் தொட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது DR உயர்வால் கூடுதலாக ஒரு சில ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் யார் என்ற விவரங்களை பின்வருமாறு பார்க்கலாம்.
- ரயில்வே அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்
- அகில இந்திய சேவை ஓய்வூதியம் பெறுவோர்
- மத்திய அரசு உட்பட சிவில் ஓய்வூதியம் பெறுவோர் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுவோர்.
- பொதுத்துறை நிறுவனம் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் உள்ள ஓய்வூதியம் பெறுபவர்கள்.
- ஆயுதப்படை ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் சிவில் ஓய்வூதியம் பெறுவோர்
- தற்காலிக ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள்
- பர்மா சிவிலியன் ஓய்வூதியம் பெறுவோர்/குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர்/ பர்மா/பாகிஸ்தானில் இருந்து இடம்பெயர்ந்த அரசு ஓய்வூதியம் பெறுபவர்களின் குடும்பங்களுக்கும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.