மாநில அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
கொரோனா காரணமாக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அதனால் கடந்த 2020ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. தற்போது நோய் பரவல் கட்டுக்குள் வந்து உள்ளதால், தொடர்ந்து மத்திய அரசும், மாநில அரசும் அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் உத்தரகாண்ட் அரசு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசின் அகவிலைப்படி அறிவிப்பைத் தொடர்ந்து மாநில அரசுகளும் ஒவ்வொன்றாக தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வை அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் கர்நாடகா, ராஜஸ்தான் சண்டிகர் அரசு உள்ளிட்ட மாநிலங்களில் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் சத்தீஸ்கர் அரசும் மே 1ஆம் தேதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி உள்ளது. அந்த வகையில் தற்போது உத்தரகாண்ட் அரசும் லட்சக்கணக்கான ஊழியர்களுக்கு நற்செய்தியை வழங்கியுள்ளது.
Exams Daily Mobile App Download
அம்மாநிலத்தில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், ஊழியர்களுக்கு மாநில அரசு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி பரிசு வழங்கியுள்ளது. அரசின் இந்த முடிவால் இரண்டு லட்சம் ஊழியர்களும், 1.25 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பலன் பெறுவார்கள். இந்த மாற்றத்தை ஜனவரி 1, 2022 முதல் அமல்படுத்த அரசு கூறியுள்ளது. உயர்த்தப்பட்ட டிஏ ஜூன் மாத ஊதியத்தில் ஊழியர்களுக்கு வழங்கப்படும். 7வது ஊதிய விகிதத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இனி ஒவ்வொரு மாதமும் 31க்கு பதிலாக 34 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீவிரமடையும் கொரோனா, ஒரே வாரத்தில் இருமடங்கு உயர்வு – மீண்டும் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு?
மேலும் உயர்த்தப்பட்ட அகவிலைப்படியின் வழக்கமான கொடுப்பனவு ஜூன் மாதத்தில் பெறப்பட்ட சம்பளத்துடன் இருக்கும். உயர்த்தப்பட்ட அகவிலைப்படி (ஜனவரி 1 முதல் ஏப்ரல் 30 வரை) ஊழியர்களுக்கு ரொக்கமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இது தவிர, ஆறாவது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ 7 சதவீதம் அதிகரித்துள்ளது. அத்தகைய ஊழியர்களுக்கு இப்போது 196 க்கு பதிலாக 203 சதவீதம் DA கிடைக்கும்.இதையடுத்து ஐந்தாவது ஊதியக் குழுவின் கீழ், சம்பளம் வாங்கும் ஊழியர்களின் அகவிலைப்படி 13 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அவர்கள் இதுவரை 368 சதவீத டிஏ பெற்று வந்தனர். ஆனால் இப்போது 381% ஆக டிஏ அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.