தீவிரமடையும் கொரோனா, ஒரே வாரத்தில் இருமடங்கு உயர்வு – மீண்டும் முழு ஊரடங்கு அமலாக வாய்ப்பு?
கடந்த ஒரே வாரத்தில், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை இரட்டிப்பாகி உள்ளது. மேலும் மாநிலத்தில் உள்ள மருத்துவ சுகாதார நிபுணர்கள் மற்றும் தொற்று நோயியல் நிபுணர்கள், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கடைப்பிடிக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார். நோய் பரவல் காரணமாக 4வது அலை தொடங்கி, மீண்டும் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலாகுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவுகிறது.
1000 ஐ தாண்டிய தினசரி பாதிப்பு:
கொரோனா எனும் பெருந்தொற்று இன்னும் நம்மை விட்டபாடில்லை, இதை முழுமையாக ஒழிப்பதற்கு தடுப்பூசிகள் கண்டறியப்பட்டாலும் வெவ்வேறு உருவில் உருமாற்றம் அடைந்து அனைவரையும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இரண்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் நோய் பாதிப்பு 1000 ஐ த்தை தாண்டி உள்ளது. நேற்று மட்டும் புதிதாக 197 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அந்த மாநிலத்தின் கொரோனா பரவல் விகிதம் 7.07% ஆக உள்ளது. இப்போது சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,728 ஆக உயர்ந்து உள்ளது.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் எர்ணாகுளம், திருவனந்தபுரம் மற்றும் கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் நோய் பாதிப்பு அதிகரித்து காணப்படுவதாக தகவல்கள் கூறுகிறது. கேரளா மாநிலத்தில் ஆண்டு இறுதித்தேர்வுகள் முடிந்து முன்கூட்டியே மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இன்று முதல் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் நலன் கருதி, அம்மாநில கல்வி அமைச்சர், மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்து வர வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் குழந்தைகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவுறுத்தியுள்ளார்.
PM கேர்ஸ் குழந்தைகளுக்கான நலத்திட்டம் – ரூ.10 லட்சம் வரை உதவித்தொகை!
இது குறித்து அவர் கூறியது “மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு முன்னெச்சரிக்கை முக்கியமானது. பெற்றோர்களும் ஆசிரியர்களும் குழந்தைகளின் உடல்நிலையை தினமும் பரிசோதிக்க வேண்டும். மேலும் கொரோனா அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்கு செல்லக்கூடாது. 12 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று அவர் அறிவுறுத்தினார். மேலும் கேரளாவில் பருவமழை காலம் தொடங்கியுள்ளதால், காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்துள்ள நிலையில், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மக்களை வலியுறுத்தியுள்ளனர்.