மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – 3% DA உயர்வால் சம்பள அதிகரிப்பு! முழு விவரம் இதோ!
இப்போது 7 வது ஊதியக்குழுவின் அடிப்படையில் ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகையை மத்திய அரசு 3 சதவீதம் உயர்த்தியுள்ளதை தொடர்ந்து இதன் மூலம் ஒரு ஊழியர் பெறும் ஆண்டு சம்பள விவரம் குறித்து இப்பதிவில் காணலாம்.
சம்பள கணக்கீடு
கொரோனா நோய் தொற்று சூழலுக்கு பின்பாக மத்திய அரசுத்துறை ஊழியர்கள் பல வகையான சலுகைகளை மொத்தமாக சேர்த்து அனுபவிக்க உள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் 2 முறை என்ற கணக்கில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி (DA) தொகை வழங்கப்படும். இந்த தொகையானது கொரோனா பேரலை தாக்கம் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு முதல் 3 தவணைகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
LIC பாலிசிதாரர்களின் கவனத்திற்கு – ‘இது’ கட்டாயம்! மத்திய அரசு அதிரடி உத்தரவு!
இப்போது மத்திய அரசு ஊழியர்களுக்கான 3 தவணை DA தொகையை 28 % லிருந்து தற்போது 31 % மாக உயர்த்தி வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த உயர்வுக்குப் பிறகு, அடுத்த தவணைக்கான DA தொகை 3% மாக உயர்த்தப்பட்டு தற்போது 31% மாக கொடுக்கப்பட இருக்கிறது. இதன் மூலம் ஊழியர்களின் மாத சம்பளம் அவர்களின் ஊதிய தரத்திற்கு ஏற்ப அதிகரிக்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வு மூலம் 47.14 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் DA உயர்வு மூலம் உயர்த்தப்பட்ட சம்பளம், ஊழியர்களின் தீபாவளிக்கு முந்தைய சம்பளத்தில் சேர்க்கப்படும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் 7 வது சம்பள கமிஷனின் படி, லெவல் 1ல் இருக்கும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் ரூ.18000 முதல் ரூ.56900 வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனால் இந்த வகையை சேர்ந்த ஊழியர்களின் சம்பள உயர்வு ஒரு ஆண்டுக்கு ரூ.30,240 ஆக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் கணக்கீடுகள் படி,
- பணியாளரின் அடிப்படை சம்பளம் – ரூ.18,000
- புதிய DA தொகை (31%) – ரூ .5580/மாதம்
- இதுவரை பெற்ற DA உதவித்தொகை (17%) – ரூ. 3060/மாதம்
- DA (5580-3060) அதிகரிப்பு – ரூ. 2520/மாதம்
- ஆண்டு ஊதிய உயர்வு (2520X12) – ரூ. 30,240
இப்போது ரூ.56900 சம்பளம் வாங்கும் மத்திய அரசு ஊழியரின் ஆண்டு சம்பள உயர்வு:
- அடிப்படை சம்பளம் – ரூ.56900
- புதிய அகவிலைப்படி (31%) – ரூ 17639/மாதம்
- இதுவரை பெற்ற உதவித்தொகை (17%) – ரூபாய் 9673/மாதம்
- DA அதிகரிப்பு (17639-9673) – ரூ 7966/மாதம்
- ஆண்டு சம்பள உயர்வு (7966X12)– ரூ 95,592
இந்த 31% அகவிலைப்படி உயர்வின் படி, ரூ.56,900 அடிப்படை சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு மொத்த வருடாந்திர அகவிலைப்படி ரூ.2,11,668 ஆக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.