தமிழகத்தில் செவ்வாய் கிழமை (அக்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழக மின்சாரத் துறையின் கீழ் ஒவ்வொரு மாதமும் பல்வேறு பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மின்தடை:
மக்கள் அனைவருக்கும் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மின்சாரம் திகழ்கிறது. அந்த மின்சாரத்தை மக்களுக்கு தடையின்றி வழங்குவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தான் மின் பராமத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மின் பராமத்து பணிகள் கடந்த சில ஆண்டுகளில் தான் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னர் பழுதான மின் கம்பங்கள், மின் கம்பிகள் என சரியான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி மின் விபத்துகள் நிகழ்ந்து வந்தன. அதனால் பல நாட்களுக்கு மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டு விடும். அதிலும் குறிப்பாக மழை காலங்களில் தினசரி இது போன்ற நிகழ்வுகள் நடந்து விடும்.
LTI நிறுவனத்தில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு – அடுத்த நிதியாண்டுக்குள் திட்டம்!
இந்த மின் விபத்தினால் சில சமயங்களில் உயிரிழப்புகளும் நிகழும். இதுபோன்ற விபத்துகளை தடுக்கும் விதமாக தான் இந்த மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் அடிப்படையில் நாளை அக்.26 (செவ்வாய்க்கிழமை) உசிலம்பட்டி உப மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதனால் உசிலம்பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 2 மணிவரை மின் விநியோகம் இருக்காது என அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு சத்துணவு துறையில் 49,000 காலிப்பணியிடங்கள் – ஊழியர் சங்கம் கோரிக்கை!
மின்தடை ஏற்படும் பகுதிகள் நாகமலை புதுக்கோட்டை, என்.ஜி.ஓ காலனி, அச்சம்பத்து, வடிவேல்கரை, கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, ராஜம்பாடி, தட்டச்சு, வடபழஞ்சி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, காளப்பன்பட்டி, பெருமாள்பட்டி பூசலபுரம், திடியன், ஈச்சம்பட்டி, பாறைப்பட்டி, உச்சபட்டி, தங்களாச்சேரி, சின்னக்கட்டளை, சேடப்பட்டி , குப்பநத்தம், மங்கலரேவு, எஸ்.கோட்டைப்பட்டி, கணவாய்பட்டி, அல்லிக்குண்டம், பொம்மனம்பட்டி, கண்ணியம்பட்டி, பெருங்காமநல்லூர், சென்னம்பட்டி, பெரிய கட்டளை, செட்டியபட்டி, கே.ஆண்டிபட்டி, தொட்டணம்பட்டி, பேரையூர், சாப்டூர், அத்திப்பட்டி, அணைக்கரைப்பட்டி, மாதரை, தொட்டப்பநாயக்கனுர், இடையப்பட்டி, நக்கலப்பட்டி, பூச்சிப்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.