அரசு ஊழியர்களுக்கு 3 சதவீதம் அகவிலைப்படி (DA) உயர்வு – சூப்பர் அறிவிப்பு!
அரசு ஊழியர்களுக்கு தற்போது அமலில் இருக்கும் 28 சதவீத அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாணை:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்குவது தொடர்பாக முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாநில அரசு அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
PF கணக்கில் 8.50% வட்டி – EPFO சந்தாதாரர்கள் சரிபார்க்கும் எளிய வழிமுறைகள் இதோ!
இதில், அரசு ஊழியர்களுக்கு தற்போது அமலில் இருக்கும் 28 சதவீத அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தப்பட்டு 31 சதவீதமாக வழங்கப்படும். இது கடந்த ஜூலை ஒன்றாம் தேதியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்பட்டு சம்பளத்தில் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தொழிலாளர் துறை உள்ளிட்ட துறைகளில் ஊழியர்கள் நியமனம் தொடர்பாக 14 விதிமுறைகளை திருத்தம் செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் ‘இந்த’ மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
மொத்தம் 37 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள நிலையில் பெண்கள், குழந்தைகள் மேம்பாடு மற்றும் சமூக பாதுகாப்பு துறையின் பரிந்துரையை ஏற்று யுனிவர்சல் பென்சன் திட்டத்தை அமல்படுத்தவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல் ஓய்வூதியம் பெறுவதில் புதிய திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஓய்வூதியம் பெற கூடியவர் அல்லது அவரின் அடுத்த குடும்ப உறுப்பினர் வருமான வரி செலுத்தும் வகையில் வருமானம் பெற கூடியவராக இருந்தாலோ அல்லது மத்திய, மாநில, பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றக்கூடிய நபராக இருந்தால் ஓய்வூதியம் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது