தமிழகத்தில் ‘இந்த’ மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – கனமழை எதிரொலி!
தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
விடுமுறை:
கொரோனா தாக்கம் தீவிரமாக இருந்து வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டது. தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 1ம் தேதி 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்படுகிறது.
மாதம் ரூ.1000 வரை பென்ஷன் – LIC இன் ஜீவன் அக்ஷய் திட்டம்! முழு விபரம் இதோ!
தற்போது தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. தமிழகத்தில் தென்காசி, கன்னியாகுமரி உள்பட 19 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையில் கனமழையின் காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகள் மற்றும் சாலைகளில் நீர் தேங்கி வெள்ளமாக காட்சியளிக்கிறது.
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ்பாஸ் – பள்ளி நிர்வாகங்கள் வலியுறுத்தல்!
தற்போதைய நிலவரப்படி சென்னை, திருவள்ளூர், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தொடர் மழை காரணமாக வள்ளியூர் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.