விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் 3 மணி நேர ஸ்பெஷல் எபிசோட் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

0
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலின் 3 மணி நேர ஸ்பெஷல் எபிசோட் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலின் 3 மணி நேர ஸ்பெஷல் எபிசோட் - ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் 3 மணி நேர ஸ்பெஷல் எபிசோட் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்கள் அனைத்துமே அதிக ரசிகர்களை பெற்றுள்ள நிலையில், மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது பாக்கியலட்சுமி தொடர் தான். தற்போது பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்பெஷல் எபிசோட்:

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. பல குடும்ப தலைவிகளின் நிலையை பிரதிபலிக்கும் காட்சிகள் மற்றும் கதையாக இருப்பதால் அதிக குடும்ப தலைவிகளின் ஆதரவை பாக்கியலட்சுமி பெற்றுள்ளது. மிகவும் பயந்த சுபாவம் உள்ள பாக்கியா தான் எதை செய்ய வேண்டும் என்றாலும், தனது கணவர் மற்றும் மாமியாரின் அனுமதியை பெற வேண்டிய சூழலில் உள்ளார். அவ்வாறு செய்யும் அனைத்து விஷயங்களையும் கேலி செய்து, பாக்கியாவின் முயற்சியை அவரது வீட்டில் யாரும் அங்கீகரிக்காமல் இருப்பார்கள்.

நம்பர் 1 இடத்தை பிடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் – சிடுமூஞ்சி சித்தார்த் & பொம்மி! ஓபன் டாக்!

இந்நிலையில் தனக்கு மிகவும் பிடித்த கேட்டரிங் தொழிலை செய்ய ஆரம்பிக்கிறார். பாக்கியா செய்யும் அனைத்து ஆர்டர்களும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பிடித்து, தனது தொழிலை பாக்கியா நம்பிக்கையோடு செய்ய தொடங்குகிறார். ஆனால் பாக்கியாவின் கணவர் கோபி தனது சிறு வயது காதலி ராதிகாவிற்கு ஆதரவாக இருக்கிறார். ராதிகாவை அனைத்து பிரச்சனைகளில் இருந்தும் காப்பாற்றுகிறார். தனது குடும்பத்திற்கு தெரியாமல் ராதிகாவின் நட்பை தொடர நினைக்கிறார். ஆனால் கோபியின் அப்பா கோபியை பற்றி அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையில் வில்லனான ஐஸ்வர்யா – சீரியல் ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!

இதனால் கோபியின் அப்பா இது பற்றி கோபியை கண்டிக்கிறார். ஆனால் கோபி மீண்டும் மீண்டும் அந்த தவறை செய்து வருகிறார். நேற்று மீண்டும் ராதிகாவை சந்திக்க கூடாது என்று கோபியிடம் சத்தியம் வாங்குகிறார். இதனால் கோபி என்ன செய்வர் என்று சீரியலில் ஒரு எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மேலும் நட்பாக பழகி வரும் ராதிகா பாக்கியா தனது பிரச்சனையை பற்றி பாக்கியாவிடம் கூறுகிறார். இதனால் கோபியை பற்றி பாக்கியா அறிந்து கொள்வாரா என்ற பதட்டமும் அதிகரித்துள்ளது. இப்படி சீரியல் செல்லும் பட்சத்தில் மேலும், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக பாக்கியலட்சுமி தொடர் வரும் சனிக்கிழமையான டிசம்பர் 18ம் தேதி அன்று மாலை 6 மணி முதல் 3 மணி நேரம் ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!