2வது திருமணம் செய்து கொண்ட பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் – குவியும் வாழ்த்துக்கள்!
தமிழ் திரையுலகின் பின்னணி பாடகியும் ‘பிக்பாஸ்’ பிரபலமுமான சுசித்ராவின் முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் குமார், அம்ருதா என்ற இளம் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த திருமணம் தொடர்பான புகைப்படங்கள் வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் திருமணம்
தமிழ் மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த ‘அலைபாயுதே’, ‘யாரடி நீ மோகினி’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் நடிகர் கார்த்திக் குமார். இப்படி, சினிமாவில் சிறிய வேடங்களில் மட்டுமே தோன்றி இருந்தாலும் இவரது நடிப்பு இன்று வரையும் பலராலும் பேசப்பட்டு வருகிறது. சினிமா தவிர ஸ்டாண்ட் அப் காமெடியிலும் கலக்கி வரும் கார்த்திக் குமார் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியலின் 3 மணி நேர ஸ்பெஷல் எபிசோட் – ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
இவர்களது காதல் திருமணம் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த நிலையில், இருவரும் பரஸ்பரம் பேசி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். விவாகரத்துக்கு பிறகு பாடகி சுசித்ராவுக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளில் உறுதுணையாக இருந்து வந்த நடிகர் கார்த்திக், தற்போது 2வது திருமணம் செய்து கொண்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வகையில் நடிகர் கார்த்திக் குமார் திருமணம் செய்து கொண்ட இளம் பிரபலம் அம்ருதா ஒரு நடிகை ஆவார்.
தமிழ் சினிமாவில் ‘மேயாத மான்’, ‘தேவ்’ உள்ளிட்ட சில திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்திருக்கும் இவர் பல வெப் சீரிஸிலும் நடித்துள்ளார். குறிப்பாக, ஒரு எழுத்தாளராக இவரது நடிப்பில் வெளியான ‘லிவ் இன்’ என்ற வெப் தொடர் இவருக்கு பல ரசிகர்களை சம்பாதித்து தந்தது. இப்படி இருக்க நடிகர் கார்த்திக் இயக்குனராக அறிமுகமாக இருக்கும் ஒரு திரைப்படத்தில் நடிகை அம்ருதா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறாராம்.
இதன் மூலம் தான் இவர்கள் இருவருக்கும் இடையே காதல் துளிர்த்திருக்கிறதாக சொல்லப்படுகிறது. இது தவிர இயக்குனர் கே.பாக்யராஜ் மற்றும் ஊர்வசி இருவரும் நடித்து வரும் புதிய திரைப்படப் பணிகளின் போதும் இவர்களுக்குள் காதல் உருவாகியதாக சொல்லப்படுகிறது. எப்படி இருந்தாலும் நடிகர் கார்த்திக் குமார் மற்றும் நடிகை அம்ருதாவின் திருமணம் நேற்று (டிச.12) சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றுள்ளது.
நம்பர் 1 இடத்தை பிடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் – சிடுமூஞ்சி சித்தார்த் & பொம்மி! ஓபன் டாக்!
இந்த திருமணத்தில் இருவரது குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வர ரசிகர்கள் புதுமணத் தம்பதிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.