நம்பர் 1 இடத்தை பிடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் – சிடுமூஞ்சி சித்தார்த் & பொம்மி! ஓபன் டாக்!
சின்னத்திரையில் ஒவ்வொரு சேனலும் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிக்க போட்டி போட்டு வரும் நிலையில், நினைத்தாலே இனிக்கும் சீரியல் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து கதையின் நாயகன் மற்றும் நாயகி இருவரும் மனம் திறந்து பேசியுள்ளனர்.
நினைத்தாலே இனிக்கும்:
அனைத்து சீரியல்களிலும் கதையின் நாயகன் மற்றும் நாயகி இருவரும் முதலில் எதிரிகளாக இருப்பார்கள் அல்லது நல்ல அன்பாக இருப்பார்கள். இதையே ஒவ்வொரு சீரியலிலும் வெவ்வேறு கோணங்களில் மக்களுக்கு சுவாரஸ்யத்தை ஏற்றி மக்கள் விரும்பும் படி தருகிறார்கள். ஒவ்வொரு சேனல்களும் தங்கள் நிகழ்ச்சி தான் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்ற போட்டியில் உள்ளது. அதேபோல் ஒரே சேனலில் உள்ள தொடர்கள் தங்கள் சீரியல்கள் தான் ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிக்க வேண்டும் என்று போட்டி போட்டு வருகின்றது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதையில் வில்லனான ஐஸ்வர்யா – சீரியல் ப்ரோமோக்களில் டாப் கமெண்ட்ஸ்!
அந்த வகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் செம்பருத்தி, ஒரு ஊருல ஒரு ராஜ குமாரி மற்றும் இன்னும் ஒரு சில தொடர்கள் மாறி மாறி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து வருகின்றது. சமீபத்தில் ‘நினைத்தாலே இனிக்கும்’ சீரியல் ஆகஸ்ட் 23 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டது. தினமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 7:30 மணிக்கு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனந்த் செல்வன் கதாநாயகனாக ‘சித்தார்த்’ கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ‘சுவாதி’ பொம்மி கதாபாத்திரத்தில் அறிமுகமாகி உள்ளார்.
கல்யாண பெண்ணாக ஜொலிக்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மீனா ஹேமா – வைரலாகும் வீடியோ!
இளம் பெண் ஒருவர் தன்னுடைய இலக்கை அடையும் பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்களைக் கடந்து சாதிப்பதை பற்றிய கதை களமாக உள்ளது. இதில், கதாநாயகன் எப்படி வருகிறார். அவருக்கும், பொம்மிக்கும் என்ன பிரச்சனை என்பது போன்ற விஷயங்கள் தொடரில் வருகிறது. இந்நிலையில் நினைத்தாலே இனிக்கும் சீரியல் தற்போது ஜீ தமிழின் டிஆர்பி ரேட்டிங்கில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து ஹீரோ மற்றும் ஹீரோயின் இருவரும் தனியார் சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளனர். இவர்கள் இருவரும் மிகவும் கலகலப்பாக நிகழ்ச்சியில் சீரியலை பற்றி பேசியுள்ளனர்.