பள்ளிகளுக்கு 3 நாட்கள் பொங்கல் விடுமுறை – அரசு அறிவிப்பு!
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுவையில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.
3 நாட்கள் விடுமுறை:
இந்தியா முழுவதும் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் அச்சுறுத்தி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் இரவு ஊரடங்கு மற்றும் பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் அமலில் உள்ளது. இந்த வகையில் கொரோனா பாதித்த மகாராஷ்டிரா, ஒடிசா, டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் முதல்வர் அறிவிப்பின்படி 1ம் முதல் 9ம் வகுப்பு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஜன.20 வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு கோரிக்கை!
இதனை தொடர்ந்து புதுவையில் கொரோனா பாதிப்புங்கள் அதிகம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் புதுவை அரசு பள்ளி மாணவர்களின் நலன் அடிப்படையில் பள்ளிகள் மூடப்பட்டது. ஆனால் பொது தேர்வு எழுதுவோர்களான 10 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதனை தொடர்ந்து தமிழர் திருநாளான தைப்பொங்கல் வரும் 14ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதன் அடிப்படையில் 3 நாட்களுக்கு பள்ளிகள் மாணவர்களுக்கு விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை முதல் வருகிற 15-ந் தேதி வரை விடுமுறை என குறிப்பிட்டிருந்தார். பொங்கல் பண்டிகை கொண்டாடும் மக்கள் தவறாமல் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.