தமிழகத்தில் ஜன.20 வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு கோரிக்கை!

0
தமிழகத்தில் ஜன.20 வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் ஜன.20 வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் - அரசுக்கு கோரிக்கை!
தமிழகத்தில் ஜன.20 வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு கோரிக்கை!

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை தடுக்க ஜனவரி 20ம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமாகா தலைவா் அரசை வலியுறுத்தியுள்ளார்.

மதுக்கடை:

தமிழகத்தில் உருமாற்றம் அடைந்த ஓமிக்ரான் வைரஸ் அதிக அளவில் பரவி வருகிறது. இந்த வகை வைரஸ் பரவ தொடங்கியது முதல் கட்டுக்குள் இருந்த கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு 20,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அரசு பல்வேறு தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜனவரி 31ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. மேலும் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலில் உள்ளது.

நாடு முழுவதும் ஜன.29 வரை பள்ளிகள் மூடல் – கல்வி அமைச்சகம் உத்தரவு!

தற்போது பரவி வரும் ஓமிக்ரான் வைரஸ் டெல்டா வகை வைரஸ் தொற்றை போல பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் மக்கள் நோய் தடுப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. வழிபாட்டு தலங்கள் வெள்ளி சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் திரையரங்குகளில் 50% பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. தடுப்பு பணியின் ஒரு பகுதியாக மக்கள் கட்டாயம் தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இந்த நிலையில் கொரோனா பரவலை முழுவதுமாக கட்டுப்படுத்த வேண்டும் என்றால் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. பொங்கல் விடுமுறை நாட்களில் மதுபிரியர்கள் மதுபான கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகம் கூடுவர். இதனால் தொற்று வேகமாக பரவ வாய்ப்புள்ளது. எனவே ஜனவரி 20ம் தேதி வரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று தமாகா தலைவர் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும் அப்போதுதான் அரசு எடுக்கும் நோய் பரவலை தடுக்க அனைத்து முயற்சிகளுக்கும் 100% பலன் தரும் என்று கூறியுள்ளாா்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!