நாடு முழுவதும் ஜன.29 வரை பள்ளிகள் மூடல் – கல்வி அமைச்சகம் உத்தரவு!
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வருகிறது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை பார்க்கலாம்.
பள்ளிகள் மூடல்
உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல்வேறு நாடுகளில் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. அதனால் கொரோனா பரவாமல் இருக்க பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தற்போது இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலை தொடங்கியுள்ளது. அதனால் பல்வேறு ஊரடங்கு விதிமுறைகளை அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் நேபாளம் நாட்டிலும் கடந்த வாரம் 1100க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!
அத்துடன் கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த ஊரடங்கு விதிமுறைகளை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, அரசு அலுவலகங்கள், ஓட்டல்கள், திரையரங்குகள், ஸ்டேடியங்கள் உள்ளிட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மேலும் உள்ளூர் விமானங்களில் பயணம் செய்ய விரும்புவர்கள் கட்டாயமான முறையில் கொரோனா தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.
தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
இந்த விதிமுறைகளை ஜனவரி 17ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக அந்நாட்டு பேரிடர் மேலாண்மை மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை விரைவில் செலுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் மாணவர்களின் நலன் கருதி நேபாளத்தில் உள்ள பள்ளிகளை ஜனவரி 29ம் தேதி வரை மூட உள்ளதாக அந்நாட்டு கல்வி அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அத்துடன் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளது.