தமிழக அரசு ஊழியர்களுக்கு 5 நாட்கள் தொடர் விடுமுறை – சூப்பர் அறிவிப்பு!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை அளித்து தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விடுமுறை அறிவிப்பு:
தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்றை தொடர்ந்து கொரோனா தொற்று வேகமெடுத்தது பரவி வருகிறது. அதனால் தமிழகம் முழுவதும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் தினசரி நாட்களில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஜனவரி 31 வரை ஊரடங்கு உத்தரவு, வார இறுதி பொதுமுடக்கம் அமல் – முதல்வர் உத்தரவு!
பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று குடும்பத்துடன் கொண்டாடுவது வழக்கம். இதை தொடர்ந்து பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்பவர்களுக்கு 13 ஆம் தேதி வரை தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,000 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,300 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக அரசு போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. மேலும் ரயில்களில் செல்ல முன்பதிவு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர் கவனத்திற்கு – மார்ச் 15 வரை காலக்கெடு நீட்டிப்பு!
தற்போது வருகிற ஜனவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகைக்கும், 15 ஆம் தேதி தேதி திருவள்ளுவர் தினத்திற்கும், 16 ஆம் தேதி தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை என்ற கணக்கில் 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து 17 ஆம் தேதி திங்கட்கிழமை அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது மேலும் 18 ஆம் தேதி வரும் தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதனால் 14 ஆம் தேதியிலிருந்து தொடர்ச்சியாக 5 நாட்கள் விடுமுறை என்பதால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.