தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – அரசின் முக்கிய அறிவிப்பு!

0
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி - அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி - அரசின் முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி – அரசின் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அத்துடன் தற்போது ஒரு புதிய அறிவிப்பை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வெளியிட்டு உள்ளது.

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகுப்பில் 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கி வருகிறது. இந்த பொங்கல் பரிசு தொகுப்பை ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

பள்ளிகளுக்கு 3 நாட்கள் பொங்கல் விடுமுறை – அரசு அறிவிப்பு!

இந்த பரிசுத் தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு, நெய் உள்ளிட்ட மளிகைப் பொருட்களும் முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய துணிப்பையில் வழங்கப்படுகிறது. தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கி கொண்டிருக்கும் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் ஜன.20 வரை டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – அரசுக்கு கோரிக்கை!

இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுவதால் அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதை நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் இதுவரை 65% குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனால் இன்று முதல் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் தொகுப்புடன் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் படி பொங்கலுக்கு பொங்கல் தொகுப்பு உடன் அத்தியாவசிய பொருட்களும் கிடைப்பதால் பொதுமக்கள் மத்தியில் மகிழ்ச்சி நிலவுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!