அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – காலரா பரவல் எதிரொலி!
காரைக்காலில் தற்போது பரவிக்கொண்டிருக்கும் காலரா தொற்று எதிரொலியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்து வரும் 3 நாட்களுக்கு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் பிராந்தியமான காரைக்கால் பகுதியில் கடந்த ஒரு சில வாரங்களாக வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். அந்த வகையில் இதுவரை 1000க்கும் மேற்பட்டவர்கள் இது போன்ற பாதிப்புகளால் அரசு பொது மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களில் 100க்கும் மேற்பட்டவர்களுக்கு காலரா தொற்று இருப்பது தற்போது உறுதியாகி இருக்கிறது.
TN Job “FB Group” Join Now
இதனை கருத்தில் கொண்ட மாவட்ட நிர்வாகம் நோய்பரவலை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இது குறித்து காரைக்கால் மாவட்ட மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் பிறப்பித்துள்ள உத்தரவில், காலரா பரவல் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் இன்று (ஜூலை 4) மாலை முதல் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று முதல் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களும் அடுத்த 3 நாட்களுக்கு மூடப்பட இருக்கிறது. இதற்கிடையில் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொன்டு வந்த இருவர் பலியாகி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அம்மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் மக்கள் பீதியடையத் தேவையில்லை என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருக்கிறது.