புது வீட்டிற்கு போவதற்கு முன் தனத்தை பார்த்து பேசிய முல்லை கதிர், அதிர்ச்சியில் இருக்கும் ஜனார்த்தனன் – இன்றைய எபிசோட்!

0
புது வீட்டிற்கு போவதற்கு முன் தனத்தை பார்த்து பேசிய முல்லை கதிர், அதிர்ச்சியில் இருக்கும் ஜனார்த்தனன் - இன்றைய எபிசோட்!
புது வீட்டிற்கு போவதற்கு முன் தனத்தை பார்த்து பேசிய முல்லை கதிர், அதிர்ச்சியில் இருக்கும் ஜனார்த்தனன் - இன்றைய எபிசோட்!
புது வீட்டிற்கு போவதற்கு முன் தனத்தை பார்த்து பேசிய முல்லை கதிர், அதிர்ச்சியில் இருக்கும் ஜனார்த்தனன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை கதிர் புது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் வழியில் தனம் ஜீவாவை பார்க்கின்றனர். பின் தனம் காலில் விழுந்து கதிர் ஆசீர்வாதம் வாங்குகிறார். பின் ஜனார்த்தனன் பணத்தை தனம் கொடுத்துவிட அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லையும் கதிரும் புது வீட்டிற்கு சென்று கொண்டிருக்கின்றனர். அப்போது ஜீவாவும் தனமும் செல்ல முல்லை தனத்தை கூப்பிடுகிறார். அப்போது முல்லை நான் புது வீடு பார்த்துவிட்டேன் என சொல்ல, தனம் முல்லை கழுத்தில் இருக்கிற மஞ்சள் கயிறை பார்க்கிறார். நான் இன்னும் வீட்டை பார்க்கவில்லை இவங்க தான் கோவில் அருகே பார்த்து இருக்கிறார். இப்போது தான் புது வீட்டிற்கு போகிறோம் என சொல்கிறார். தனம் எதுவும் பேசாமல் இருக்க முல்லை ஜீவாவிடம் மாமா நன்றாக இருக்கிறாரா என கேட்கிறார்.

நன்றாக இருப்பதாக சொல்ல கயல் எப்படி இருக்கிறாள் என என்னை தேடினாளா என கேட்க ஆமாம் என ஜீவா சொல்கிறார். பின் கதிர் சாவியை வேண்டும் என்றே கீழே போட அது தனம் கால் அருகே கிடக்கிறது. உடனே சாவியை எடுப்பது போல தனம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார். பின் தனமும் ஜீவாவும் கிளம்பி செல்கின்றனர். அப்போது தனம் அவன் எவ்வளவு ரூபாய்க்கு நகையை வைத்தான் என கேட்க 1.5 லட்சம் என ஜீவா சொல்கிறார். அதெல்லாம் அட்வான்ஸ் வாடகை பொருள்கள் வாங்கவே சரியாகிவிடும் என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது ஜீவா அவன் எதோ வேலை தேடி இருப்பதாக சொன்னான் என சொல்ல, கண்ணன் போல இவனை நினைத்து கவலைப்பட வேண்டாம் என சொல்கிறார். பின் கதிர் முல்லை அடுப்பு வாங்க வேண்டும் என சொல்ல கதிர் அதெல்லாம் நான் வாங்கிட்டேன் வேற என்ன வாங்க வேண்டும் என கேட்கிறார். சில பொருள்கள் வாங்க வேண்டும் என சொல்ல பின் சில சாமி புகைப்படம் வாங்க வேண்டும் என முல்லை சொல்கிறார். அப்போது கதிர் அண்ணன் அண்ணி போட்டோ மாட்டுவது தான் முக்கியம் என சொல்ல போட்டோ கடைக்கு சென்று போட்டோ வாங்கி கொண்டு புது வீட்டிற்கு செல்கின்றனர்.

பின் தனமும் ஜீவாவும் மீனா வீட்டிற்கு செல்கின்றனர். மீனாவின் அம்மா பார்த்து இவர்கள் எதற்கு இங்கே வராங்க மீனா எதுவும் சொல்லவில்லையே என நினைக்கிறார். பின் மீனா அம்மா உள்ளே கூப்பிட்டு காபி சாப்பிடுகிறீர்களா என கேட்கிறார். பின் மீனாவின் அப்பா வர மூர்த்தி எப்படி இருக்கிறார் என கேட்கிறார். முடியாதவரை வீட்டில் தனியாக விட்டுவிட்டு என்ன விஷயமாக இங்கே வந்துருக்கீங்க என கேட்க தனம் எதுவும் பேசாமல் இருக்கிறார். சரியாக மாத்திரை எல்லாம் சாப்பிடுகிறாரா என கேட்க ஆமாம் என தனம் சொல்கிறார்.

ரொம்ப முடியவில்லை என்றால் பெரிய மருத்துவமனையில் பார்க்கலாம் என சொல்கிறார். பின் மீனாவின் அம்மா பார்த்தீங்களா எப்படி எல்லாம் பேசுகிறார் என நினைத்து சந்தோசப்பட தனம் பணத்தை கொடுக்கவா என கண்ணை காட்டுகிறார். ஜீவா சரி என சொல்ல தனம் பணத்தை எடுத்து கொடுக்கிறார். என்ன இது என மீனாவின் அப்பா கேட்க ஆஸ்பத்திரியில் சரியான நேரத்தில் பணம் கொடுத்தீர்கள் அதை திருப்பி கொடுப்பது தான் மரியாதை என சொல்ல ஜனார்த்தனன் அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார்

அம்மா பற்றி பாரதியிடம் கேட்கும் ஹேமா, வெண்பாவை வெறுப்பேற்றும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!

பின் மீனாவிடம் வாங்கிய 45000 பணத்தையும் தனம் ஜீவாவிடம் கொடுக்க இது எனக்கு எதற்கு அவங்களிடம் கொடுத்துவிடுங்கள் என சொல்கிறார். இப்படி உடனே பணத்தை கொடுப்பது என்ன அர்த்தம் என ஜனார்த்தனன் கேட்க ஆபத்தில் கொடுத்தீர்கள் அதை திருப்பி கொடுப்பது தான சரியானது என சொல்கிறார். தனம் பணத்தை கண்டிப்பாக வாங்க வேண்டும் என சொல்ல ஜனார்த்தனன் அதை கோபத்துடன் பார்க்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!