மே 14 முதல் 3 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
வங்கி விடுமுறைகளை ரிசர்வ் வங்கி நான்கு அம்சங்களின் அடிப்படையில் தீர்மானிக்கிறது. தேசிய அளவில் மற்றும் மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளின் அடிப்படையில் விடுமுறை அளிக்கப்படுகிறது. இது தவிர, தேசிய விடுமுறைகள் மற்றும் சனி-ஞாயிறு விடுமுறைகளும் காலண்டரில் உள்ளன. இதன் அடிப்படையில் மே 14, மே 15, மே 16 ஆகிய மூன்று நாட்கள் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
3 நாட்கள் விடுமுறை:
ஏப்ரல் மாதம் முடிவடைந்து, மே மாதம் தொடங்கி உள்ள நிலையில், மே 2022க்கான விடுமுறைப் பட்டியலை ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு மாத முடிவின் போதும் அடுத்த மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருவது வழக்கம் ஆகும். மே மாதத்தில் கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன, மேலும் வங்கி விடுமுறைகளில் பாதி விடுமுறைகள் முடிந்து விட்டன. இந்த மாதத்தில் வங்கிகளுக்கு மொத்தம் 11 விடுமுறைகள் ஒதுக்கப்பட்டது. மாநில மற்றும் உள்ளூர் பண்டிகைகளுக்கு ஏற்ப வங்கி விடுமுறை நாட்கள் வேறுபடும்.
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – படுக்கை வசதி மீண்டும் வழங்கல்!
வங்கி விடுமுறைகளை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்கள் வங்கிக் கிளைகளில் பணத்தை எடுக்க மற்றும் டெபாசிட் செய்ய போன்ற பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடிக்கலாம். இந்திய ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் விடுமுறை நாட்களில் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Exams Daily Mobile App Download
மே மாதத்தில், 11 விடுமுறை நாட்களில், மே 1 (ஞாயிறு), மே 2 (ஈத்-யுஐ-ஃபித்ரா), மே 3 (பகவான் ஸ்ரீ பரசுராம் ஜெயந்தி/ரம்ஜான்-ஈத்), மே 8 (ஞாயிறு), மே 9 (ரவீந்திரநாத் தாகூரின் பிறந்த நாள்) ஆகிய 5 விடுமுறை நாட்கள் ஏற்கனவேமுடிந்துவிட்டது. இப்போது இன்னும் ஆறு விடுமுறைகள் மட்டுமே உள்ளன. அந்த வகையில் மே 14 முதல் மே 16 வரை, பின்னர் மே 22 (ஞாயிறு), மேலும் மே 28 முதல் மே 29 வரை நான்காவது வார இறுதி நாட்கள் ஆகும். ரிசர்வ் வங்கியின் கூற்றுப்படி, புத்த பூர்ணிமா கொண்டாட்டம் காரணமாக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மே 16 அன்று வங்கிகள் மூடப்படும். மே 14 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமை (மே 15 ஆம் தேதி) வழக்கம் போல் வங்கிகளும் மூடப்படும். அதன் அடிப்படையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.