ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – படுக்கை வசதி மீண்டும் வழங்கல்!

0
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் - படுக்கை வசதி மீண்டும் வழங்கல்!
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் - படுக்கை வசதி மீண்டும் வழங்கல்!
ரயிலில் பயணம் செய்வோருக்கு ஹாப்பி நியூஸ் – படுக்கை வசதி மீண்டும் வழங்கல்!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ரயில் போக்குவரத்து முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து ரயில்கள் வழக்கம் போல இயங்கி வருகின்றன. இதனை தொடர்ந்து தற்போது நீங்கள் முன்பதிவு செய்த ரயில்களில் படுக்கை வசதி உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பயணிகள் கவனத்திற்கு

இந்தியாவில் சாதாரண மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில் இதில் குறைந்த கட்டணத்தில் டிக்கெட் கிடைப்பதால் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களும் இதில் பயணம் மேற்கொள்ள முடிகிறது. அதனால் நாள்தோறும் ரயிலில் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா கால கட்டத்தில் தொற்று பரவலை கட்டுப்படுத்த ரயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. அதன்பின் தொற்று பரவல் குறைந்த பிறகு ரயில்களில் முன்பதிவு செய்து பயணித்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

கரூரில் நாளை (மே 14) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!

இதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்தது. அதனால் ரயில்களில் முன்பதிவில்லா சேவைகளுக்கு ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இதையடுத்து ரயில்களில் நீண்ட தூர பயணங்களில் பயணிகளுக்கு வசதியாக விரிப்பு தாள்கள், தலையணைகள் மற்றும் போர்வைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வசதிகள் கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன. அதனால் பயணிகள் தாங்களே சொந்தமாக தலையணைகள், போர்வைகள் எடுத்து வர வேண்டியதாயிற்று. இதையடுத்து தற்போது கொரோனா பரவல் முற்றுலுமாக குறைந்துள்ளதால் ரயில்களில் படுக்கை வசதி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

அத்துடன் ஏசி பெட்டிகளில் திரைச்சீலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த வசதிகள் சில ரயில்களில் மட்டுமே ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து ரயில்களிலும் கூடிய விரைவில் இந்த வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. இப்போது நீங்கள் பயணம் செய்யப் போகும் ரயில்களில் படுக்கை வசதி உள்ளதா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும். இதற்கு நீங்கள் https://contents.irctc.co.in/en/LINEN.html என்ற IRCTC இணையதளத்தை அணுக வேண்டும். நீங்கள் டிக்கெட் புக்கிங் செய்த பிறகு IRCTC மூலமாக உங்கள் மொபைல் எண்ணுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும். இந்த லிங்கை கிளிக் செய்து நீங்கள் பயணம் செய்ய உள்ள ரயிலில் படுக்கை வசதி உள்ளதா என்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!