ஐ.டி துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் – மத்திய அமைச்சர் அறிவிப்பு!!
கடந்த 2019 ஆம் ஆண்டு தகவல் தொழிநுட்ப துறையில் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
வேலைவாய்ப்புகள்:
இந்திய நாடு உலகிலேயே 2வது அதிக மக்கள் தொகை கொண்ட ஒரு வளர்ந்து வரும் நாடாகும். நவீன உலகில் தொழில்நுட்ப செயல்பாடுகள் மூலமாக எதையும் செய்ய முடியும். தொழில் துறையில் பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, இந்த காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறை சேவைத் துறையாக உள்ளது. இந்த துறை செயல்பட மனித வளம் தான் பெரும் மூலதனம்.
TN Job “FB Group” Join Now
இந்த துறையில் பெண்கள் 14 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். மொத்தமாக 46 லட்சம் பேர் இந்த துறையில் பணியாற்றி வருகின்றனர். இது குறித்து மத்திய தகவல்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், நாட்டில் உள்ள மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐடி துறை மூலமாக 8 சதவிகிதம் வருமானம் கிடைக்கிறது. இந்த துறையில் 2019 ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
தமிழக பள்ளிகளில் மாணவர் வருகை குறைவு – கொரோனா அச்சம் எதிரொலி!!
ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளை போன்று நீதித்துறையை வலுப்படுத்தும் நோக்கில் அகில இந்திய சட்டப் பணிக்கான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 2012 ஆம் ஆண்டு முதல் ஏஐஜேஎஸ் தொடங்குவது குறித்து மாநில அரசுகளுடன் மத்திய அரசு கலந்து ஆலோசித்து வருகிறது. இந்த அமைப்பு மூலமாக அகில இந்திய அளவில் தகுதியான வழக்கறிஞர்களை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.