திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

0
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு - 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்!
திருப்பதி தரிசனம் செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு – 20 சிறப்பு ரயில்கள் இயக்கம்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கோடை விடுமுறை என்பதால் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பக்தர்களின் வசதிக்காக 20 கூடுதல் சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

சிறப்பு ரயில்:

ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த வருடம் முதல் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. மேலும் பக்தர்களுக்கு நேரடி தரிசன முறையும் ரத்து செய்யப்பட்டது. இதனால் கோயிலில் வருமானமும் குறைந்தது. எப்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் சுவாமி தரிசனம் செய்ய முடியும் என்று பக்தர்கள் எண்ணிக்கொண்டிருந்த நிலையில் பல்வேறு நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு படிப்படியாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்தது. அதனால் மீண்டும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

ஆனால் முன் பதிவு அடிப்படையில் மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் மாதந்தோறும் திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. இலவச தரிசன டிக்கெட்டுகள் மட்டும் நேரடி முறையில் வழங்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 10,000 டிக்கெட்டுகள் வீதம் திருப்பதி தேவஸ்தானத்தில் 3 இடங்களில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது தினமும் 75 ஆயிரம் பக்தர்கள் வரை சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இந்த மாதம் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

Exams Daily Mobile App Download

இதனால் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் 7 மணி நேரம் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திருமலையில் உள்ள வைகுண்டம் காம்ப்ளக்சில் தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் பக்தர்கள் வசதிக்காக தென் மத்திய ரயில்வே துறை 20 கூடுதல் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்துள்ளது. ஹைதராபாத்-திருப்பதி, திருப்பதி-காக்கிநாடா, திருப்பதி-ஹைதராபாத், திருப்பதி-காச்சிகுடா இடையே சிறப்பு ரயில் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. திருப்பதி-காச்சிகுடா எக்ஸ்பிரஸ் ரயில் ஜூன் 1 மற்றும் 2-ம் தேதிகளில் மட்டும் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!