தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

0
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!
தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் பொருட்கள் மலிவான விலையில் ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது ரேஷன் பொருட்களை 3ம் நபர் விலைக்கு வாங்கினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்மபுரி மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரேஷன் கார்டு

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பேரிடர் காலங்களில் ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ரேஷன் கடைகளில் உரிய ரேஷன் அட்டைதாரர்கள் பொருட்கள் வாங்காமல் மற்ற நபர் பெற்று அதனை சந்தைகளில் அதிக விலைக்கு விற்று வந்தனர். இது போன்ற முறைகேடுகளை தவிர்க்க வேண்டுமென்று தற்போது “ஒரே நாடு ஒரே ரேஷன்”, என்ற திட்டம் ரேஷன் கடைகளில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ரசிகர்களுக்கு ஷாக் – 2023 சீசனுக்கு முன் அணியில் இருந்து நீக்கப்படும் 5 வீரர்கள்!

அதன்படி இத்திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்களை குடும்ப அட்டைதாரர் அல்லது ரேஷன் கார்டில் உள்ள ஏதேனும் உறுப்பினர் உள்ளிட்டவர்கள் மட்டுமே தங்களின் கை ரேகைகளைப் பதிவு செய்து ரேஷன் பொருட்களை பெற முடியும். இதன் மூலமாக தகுதியான நபர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் இந்த மாதத்தில் இருந்து 2 கிலோ புழுங்கல் அரிசி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Exams Daily Mobile App Download

மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ரேஷன் கடைகளில் அடைத்தார்கள் வாங்க விரும்பும் பொருட்களை மட்டும் கொடுக்கலாம். அத்துடன் ரேஷன் அட்டைதாரர் தங்களுக்கு தேவைப்படாத ரேஷன் பொருட்களை பெற்று 3ம் நபர்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறி செயல்படுபவர்களின் குடும்ப அட்டைகள் பண்டகமில்லா குடும்ப அட்டைகளாக மாற்றப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் ரேஷன் பொருட்களை வாங்கும் வியாபாரிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். இதையடுத்து இருசக்கர வாகனங்கள், லாரிகள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்களில் ரேஷன் பொருட்களை கடத்துபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!