தமிழகத்தில் புதியதாக 2 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – முதல்வர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததால் பல்வேறு வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு வெளிநாட்டினர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் தொழில் முதலீடுகள் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்து தமிழக முதல்வர் தகவல் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டு வேலைவாய்ப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து ஏராளமான வேலைவாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது. அத்துடன் பல்வேறு வெளிநாட்டினர்களும் தமிழகத்தில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்விளைவாக பல வெளிநாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும் தமிழகத்தில் இதுவரை ஈர்க்கப்பட்டுள்ள முதலீடுகள் மற்றும் உருவாக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு குறித்து தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத்தொடரில் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 10, 11 & 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு!
இவர் கூறியதாவது, கோயம்புத்தூரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி மூலமாக 35,208 கோடி ரூபாய் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 76,795 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் 59 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தூத்துக்குடியில் கடந்த மார்ச் மாதத்தில் சர்வதேச அறைகலன் பூங்கா அடிக்கல் நாட்டு விழாவின் போது 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலமாக 15,103 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் சுமார் 4,488 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.
சென்னை: மீண்டும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்வு – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
இதனை தொடர்ந்து தமிழக முதல்வர் துபாய் மற்றும் அபுதாபி நாடுகளுக்கு கடந்த மாதம் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை அரசு முறை சுற்று பயணம் மேற்கொண்டார். இதில் 6,100 கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு அதன் மூலம் தமிழகத்திற்கு 15,100 பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் 14 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். மேலும் இது போன்று பல்வேறு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இதுவரை தமிழகத்திற்கு 68,375 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி தமிழகத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.